Monday, August 04, 2008

குசேலன் - நேர்மையான விமர்சனம்

குசெலன் படத்தை ரிலீஸுக்கு முந்திய நாளே பார்த்து விட்டாலும் அடுத்த இரண்டு நாட்கள் இனையப்பக்கம் ஒதுங்க முடியவில்லை. நேற்று வந்து பார்த்ததில் படத்தை விமர்சனம் செய்த அனைவரும் கிட்டதட்ட கடித்து குதறி இருந்தனர். அதில் எனக்கு ரஜினி மீதான காழ்ப்புணர்ச்சியே அதிகம் தெரிவதால் இந்த பதிவு.


படத்தில் பாராட்டுவதற்கும் குட்டுவதற்கும் தேவையான அளவு வசதி உள்ளது.



1. சண்டை காட்சி இல்லாமல் பன்ச் வசனங்கள் இல்லாமல் இது போன்ற கதையில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டது பாராட்டப்பட வேண்டியது. இது நாள்வரை மசாலா பாடங்களையே கொடுக்கிறார் என குற்றம் சாட்டியவர்கள் எங்கே போனார்கள் என தெரியவில்லை. இதை பற்றி ஒரு சிறு பாராட்டை ஒரு பதிவில்கூட பார்த்ததாக நினைவில்லை.


2. பசுபதியின் கதாபாத்திரம் அருமை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் வறுமையில் செம்மை. ஒரு சிலர் பசுபதியின் மீது பரிதாபம் வரவில்லை என கூறி இருந்தனர். எனக்கு அவர்கள் மேல் பரிதாபமே வருகிறது. நேர்மையாகவும் அதில் நிம்மதியாகவும் வாழும் பாத்திரம் அது.நன்றாக செய்திருக்கிறார்.ஆனால் கிட்டதட்ட ஒரே விதமான நடிப்பை மட்டுமே வெளிக்காட்ட கூடிய கதை.

3. சொல்லம்மா பாடல் காட்சியில் வரும் பிண்ணனி காட்சிகள் அருமை(டால்பின்களை தவிர்த்து).

4. இது கடைசிகாட்சி வரை பசுபதி படமே. கடைசி காட்சியில் ரஜினி படமாக மாறி விடுவது ரஜினியின் அருமையான நடிப்பால். மனிதர் கலக்கி இருக்கிறார்.


5.படத்தில் இறுதி காட்சி அருமை. படம் ஆரம்பம் முதல் அனைத்து காட்சிகளும் இதனை நோக்கியே போகின்றது. படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்ததாலும் இறுதி காட்சியை எதிர்ப்பார்ப்பதாலும் முன்பாதி ஒருவேளை சலிப்பை பலருக்கு கொடுத்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆனாலும் இந்தளவுக்கு அதிகமாக ஓவர்பிலப் கொடுத்து இருந்தும் இறுத்க்காட்சி அனைவருக்கும் நிறைவை கொடுத்தது ரஜினியால்.

6.நயன்தாரா கவர்ச்சிக்காக மட்டுமே வருகிறார்.:-( அந்த பாடல் காட்சியும் தேவையில்லாதது.

7. காமெடி எனற பெயரில் வரும் காட்சிகள் கொடுமை. ரஜினியை சந்திக்கும் காட்சியை தவிர மற்ற காட்சிகளில் எல்லாம் வடிவேலு சொத்ப்போ சொதப்பல். சந்திரமுகி அளவு இல்லையென்றாலும் இரட்டை அர்த்த வசனங்கள் கடுப்பெற்றுகின்றன. இதெல்லாம் தேவையா?? வாசூஊஊஊ...


9. வாசு செய்த பில்டப் ஓவர்.. அவர் ஓவராக பில்டப் கொடுத்ததே பல பிரச்சினைகளுக்கு காரணம். ரஜினியும் ஆரம்பத்தில் தெளிவாகவே இருந்தார்.. ஆனால் வள்ளி போல் ஆகிவிடும் என பயமுறுத்தி இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார் வாசு.

மொத்தத்தில் அதிக எதிர்பார்ப்பில்லாமல் பார்த்தால் நிச்சயம் ரசிக்கக்கூடிய படம். ரஜினி ரசிகர்களுக்கு படம் பிடிக்கும். பொதுவானவர்களுக்கு இறுதிக்காட்சி பிடிக்கும். ரஜினியை பிடிக்கதவர்களுக்கு? கண்டிப்பாக பிடிக்காது. தியேட்டர் பக்கம் ஒதுங்கவேண்டாம்.. இல்லை பார்த்து பின் திட்டியே தீருவேன் என்றால் நான் என்ன சொல்ல.

ரஜினி இன்னும் மசாலாக்களை குறைத்து நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடிக்க இந்த படம் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெரும். சிவாஜிக்கும் தசாவதாரத்துக்கும் இது போன்றே நெகட்டிவ் விமர்சனங்கள் ஆரம்பத்தில் வந்தன. பிறகு அதன் வெற்றி பலருக்கு கண்ணை கட்டியது.. அந்தளவிற்கு இல்லாவிட்டாலும் நிச்சயம் வெற்றியடையும் எனவே நான் நம்புகிறேன்

படத்தில் பனிபுரிந்தவர்களுக்காக நிதியுதவி அளிக்கும் ரஜினிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Sunday, August 03, 2008

ரஜினியின் மன்னிப்பு - என் பார்வையில்.

"நான் தவறு செய்துவிட்டேன்.. கர்நாடக மக்கள் எனக்கு பாடம் கற்றுக்கொடுத்து விட்டனர். இனி இது போன்ற தவறை என் வாழ்நாளில் செய்யமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். குசெலன் வெளிவர ஒத்துழைப்பு தாருங்கள்" - குசேலன் படத்தை நண்பர்களுடன் பார்க்க ஆரவாரமாக ஆயத்தமாகிக்கொண்டிருந்த நேரத்தில் இந்த கசப்பான செய்தியை கேட்டேன்..

புரியவில்லை.. புரியவில்லை என்பதை விட நம்பமுடியவில்லை..ஆனால் உண்மை என ஒரு நண்பர் உறுதிப்படுத்தினார். ரஜினி ரசிகனானாலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பிடிக்காத ரசிகன் நான். அதற்கு காரணம் அவரால் ஒன்றும் செய்துவிட முடியாது + அரசியல் அவருக்கு ஒத்துவராது என நினைத்ததே.. ஆனால் நல்லது செய்ய முயற்சிப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது கிடையாது.. இந்த செய்தியை கேட்கும் வரை.

எனக்கு பயங்கர கோபமும் எரிச்சலும் வந்தது. அவர் ஒகனேக்கல் விவகாரத்தில் பேசியது, பிறகு மன்னிப்பு கேட்க முடியாது என சொன்னது, KFCCக்கு கடிதம் எழுதியது வரை அனைத்தும் சரியே.. அவர் திறமை மேல் உள்ள மதிப்பு அதிகமானது. அவரை இன்னும் பிடித்தது..
ஆனால் இந்த மன்னிப்பு???? சீ என சொல்ல வைத்துவிட்டது.

அவசியமா?
அந்த மன்னிப்பின் அவசியம் எனக்கு இன்னும் புரியவில்லை. குசெலன் இங்கு வெளியிடப்படுவதில் எந்த பெரிய சிக்கலும் இருக்கவில்லை. திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி விட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. மேலும் ரஜினி மன்னிப்பு கேட்டு அப்படி படம் பார்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே கர்நாடகாவில் உள்ள எந்த ரஜினி ரசிகனிடம் கேட்டிருந்தாலும் வரும் பதிலாக இருந்திருக்கும். ஒருவேளை குசெலன் வெளியிடப்படாமல் இருந்திருந்தால் அது கன்னடர் மத்தியிலும் வட்டாளுக்கு கெட்ட பேரையே வாங்கி தந்து இருக்கும். இதனால் சிறு நட்டம் ஏற்பட்டாலும் வேறு விதத்தில் அதனை சரிப்படுத்த முயன்றிருக்கலாம்.

சரியா?
தனிப்பட்ட முறையில் தனது வீரம் இவ்வளவுதான் என்பதை புரிய வைத்து விட்டார். தன்னை/தான் பேசுவதை நம்புபவன் முட்டாள் என சொல்லாமல் சொல்லிவிட்டார். இந்த மன்னிப்பு மூலம் தமிழக உரிமை தவறோ என்ற ஐயப்பாட்டை பல கன்னடர்கள் மனதில் ஏற்படுத்தி விட்டார்.இதன் மூலம் ஒன்றுமில்லாத (டெபாசிட் இழந்த)வட்டாளை பெரிய ஆள் என்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்திவிட்டார்.. அந்தாள் மேலும் ஒவ்வொரு முறையும் எதை வேண்டுமானாலும் செய்யலாம்..தன்னை மீறி ஒன்றும் செய்ய இயலாது என செயல்பட வாய்ப்புகள் அதிகம். இது ஒகனேக்கல் மற்றும் எந்த தமிழக நலன் சார்ந்த திட்டமாக இருந்தாலும் தமிழர் நலனுக்கு எதிராக இது இருக்கும் என சொல்லவேண்டியதில்லை. ஆகவே இந்த மன்னிப்பு நிச்சயம் மிகப்பெரிய தவறுதான்.

மேலும் ரஜினி ரசிகர் ஒவ்வொருவருக்கும் இது கசப்பையே கொடுத்திருக்கும் என்பது என் எண்ணம்.. ரஜினியை மதிக்கும் போற்றும் ரசிகர்களிம் தன்மானத்தை நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது ரஜினியின் கடமை. அதனை அவர் செய்ய தவறும்போது அவரின் மானத்தையும் மதிப்பையும் தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் எந்த ரசிகனுக்கும் கண்டிப்பாக தேவையில்லை.

ம்ம்.. சொல்ல மறந்து விட்டேன்
அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Wednesday, June 18, 2008

பாமாக- திமுக-ஆதிமுக-காங்கிரஸ்

ராமதாஸ் : பார்த்தீங்களா..பார்த்தீங்களா.
ஜெயா : கேட்டீங்களா..கேட்டீங்களா
மு.க : (2-3 மாதம் கழித்து) : வாங்கிட்டீங்களா..வாங்கிட்டீங்களா
_____________________________

திமுக - பாமாக முறிவு நீண்ட நாட்களாக எதிர்பார்த்ததுதான். வெளியேறுவார்களா/வெளியேற்றப்படுவார்களா என்பதற்கு மட்டும் முடிவு தெரிந்துவிட்டது.

பாமாகவுக்கு ஆதிமுக(கூடவே பாஜாக)வுடன் கூட்டு சேர ஆசைப்பட்ட எதிர்பார்த்த சந்தர்ப்பம். மத்தியில் பாஜாக தான் அடுத்து வரும் போல் தெரிகிறது.பாமாக ஜெயிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள ஆசசப்படும் என்பது தெரிந்ததுதான்.

இது திமுகாவுக்கு நிச்சயம் பலவீணம்தான். அவர்களின் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. (கனிமொழி/ஸ்டாலின் - அழகிரி /அழகிரி மகள்/ராயல் கேபிள் விஷன்) - குடும்ப அரசியல் விவாதம் மறுபடியும் ஆரம்பிக்கும். இதற்கு திமுகாவிடம் சரியான பதில்கள் இருப்பதாக தெரியவில்லை.

இப்போது காங்கிரஸுக்கு செல்வாக்கு அதிகம். அது அவர்களின் பல கோஷ்டிகளை எப்படி யோசிக்கவைக்கும்/பேசவைக்கும் என்பது கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும். மொத்தத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

ஆதிமுக, அதாவது ஜெயலலிதா அமைதியாக ஆணவம் இல்லாமல் இருந்தாலே அடுத்த ஆட்சியை பிடித்து விடலாம். இருப்பாரா?

மதிமுக : ?

Tuesday, June 17, 2008

தசாவதாரம் - பத்தே பத்து வரி.

தமிழ்மண விமர்சனங்களுக்கு நன்றி - இடைவேளையில் திருப்தியாகவே உணர்ந்தேன் :-)

முதல் பத்து நிமிடங்கள் அருமை.(கொடுத்த காசு அதற்கே சரியென்றாலும் தொடர்ந்து பார்த்தது ஆட்டோவின் அநியாய மீட்டருக்கு சரியானது. )அமெரிக்காவில் நடக்கும் காட்சிகளும் நன்றாகவே எடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் பாதியில் லாஜிக் ரோம்பவே இடிக்கிறது. விறுவிறுப்பும் குறைவு. அசின் - கடுப்பேற்றுகிறார். என்னடா லாஜிக் இது என்ற யோசனைக்கு வித்திடுகிறார். அது படம் முடியும்வரை தொட்ர்கிறது.

அனாவசிய செலவுகளாக எதுவும் தெரியவில்லை. தொழில்நுட்பம்/கேமரா அருமை.

கடவுள் இல்லை என சொல்லுகிறார்..ஆனால் அந்த பண்ணிரண்டாம் நூற்றாண்டு முடிச்சு உட்பட அனைத்தும் கடவுள் இருப்பதை உறுதி செய்வதாகவே உள்ளது.

கமலின் உழைப்பு, அதை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒவ்வொறு பாத்திரத்தின் வசன உச்சரிப்பு/பாடி லாங்குவேஜ் வித்தியாசம் அருமை. hats off Kamal.

பாதி பாத்திரங்களின் மேக்கப் mask போட்டு விட்டது போலவெ இருந்தது.

fletcher-ஐ எனக்கு பிடித்தே இருந்தது. நன்றாகவே இருந்தது அந்த கதாபத்திரம். கூடவே பல்ராம் நாய்டு(மேக்கப் அருமை) & பூவராகவன். வழக்கமான கமல் சராசரிதான். ஒன்றும் புதிதாகவோ பாரட்டும்படியோ இல்லை

கலிபுல்லா,அவ்டார் சிங்(+ magic bullt) தேவையே இல்லாதவை (அசினும்தான்). புஷ் பாத்திரம் தமாஷ். அதைவிட பெரிய தமாஷ் இதை புஷ் பார்க்கப்போவதாக புரளிவிட்டது. தோற்றம் ஓரளவு புஷ் போலவே இருந்தது.

தாராளமாக பார்க்கலாம். (கண்டிப்பாக தியேட்டரில் மட்டுமே) பார்க்க வேண்டிய படம்.

Monday, June 18, 2007

அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்கவேண்டும் - ஜெயலலிதா திடீர் கோரிக்கை

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் அப்துல் கலாமையே நிறுத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான மூன்றாவது அணி கோரிக்கை விடுத்துள்ளது. அவரை சந்தித்து போட்டியிடுமாறு கோரப் போவதாகவும், அவரையே ஆதரிக்கப் போவதாகவும் இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது. இன்று ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த 3வது அணியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக் கூட்டத்தில் ஜெயலலிதா தவிர, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்திய தேசிய லோக்தள் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா, ஜார்க்கண்ட் மோச்சா தலைவர் பாபுலால் மராண்டி, அஸ்ஸாம் கன பரிஷத் தலைவர் பிரிந்தாபன் கோஸ்வாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தில் 3வது அணிக்கு புதிய பெயரும் சூட்டப்பட்டது. இனிமேல் இந்தக் கூட்டணி ஐக்கிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று அழைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகும். இந்தப் பெயரை சூட்டியவர் முதல்வர் கருணாநிதி. இப்போது கிட்டத்தட்ட அதே பெயரில் ஜனநாயகத்தையும் சேர்த்து தனது அணிக்கு பெயர் சூட்டியுள்ளார் ஜெயலலிதா. பாத்திமா பீவி.... முன்னதாக மூன்றாவது அணியின் சார்பில், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அல்லது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் தமிழக ஆளுநருமான பாத்திமா பீபி ஆகியோரில் ஒருவரை நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. டான்சி வழக்கில் ஜெயலலிதா மீது நீதிமன்றமே குற்றம் சாட்டிய நிலையிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஏதோ காரணத்துக்காக, ஜெயலலிதாவையே முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் பாத்திமா பீவி என்பது நினைவிருக்கலாம். கேரளத்தைச் சேர்ந்த பாத்திமா பீவிக்கு வேண்டப்பட்ட மலையாள நிதி நிறுவன அதிபரை மிரட்டியதால் தான் வெங்கடேச பண்ணையாரை எண்கவுண்டரில் போட்டுத் தள்ளியது அதிமுக அரசு என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டதும் நினைவுகூறத்தக்கது. ஆனால், பாத்திமா பீவிக்கு பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. அதே போல பரூக் அப்துப்லாவுக்கும் கூட்டணியில் பெரும்பாலானவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து பெண் வேட்பாளரை நிறுத்தி தங்களுக்கு செக் வைத்த காங்கிரசுக்கு பதிலடி தரும் வகையில் அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தக் கோருவது என முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம் தேசிய அளவில் தங்களது கூட்டணிக்கு புதிய மரியாதை கிடைக்கும் என ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது. ஆனால், கலாம் அதை ஏற்காவிட்டால் இந்தக் கூட்டணி யாரை ஆதரிக்கும் என்று தெரியலில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன், சுயேச்சையாக துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் போட்டியிடவுள்ளார். ஆனால், எக்காரணம் கொண்டும் அவரை ஆதரிப்பதில்லை என மூன்றாவது அணியின் முக்கிய கட்சியான முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி முடிவு செய்துள்ளது. அக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களின் ஆதரவை இழந்ததால் தான் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சி தோல்வியடைந்தது. இந் நிலையில் இஸ்லாமியர்களின் வாக்குகளை மனதில் வைத்து இந்த முடிவுக்கு அந்தக் கட்சி வந்துள்ளது. அதே போல சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் பாஜக வேட்பாளரை ஆதரிக்கத் தயாராக இல்லை.


இதுதாண்டா அரசியல் :-(

Wednesday, May 16, 2007

அரசியல் சதுரங்கம்.

தற்போது தமிழக அரசியலில் நடந்து வரும் ராஜதந்திரங்கள் (அ)அரசியல் நாடகங்கள் (அ) கேலிக்கூத்துக்களின் பிண்ணனி பற்றிய என் பார்வை.

கலாநிதிக்கு பணம் மட்டுமே குறிக்கோள். மீடியாவின் அனைத்து விதங்களிலும் தானே முதலில் இருக்க வேண்டும் என்பதே கனவு. அத்ற்கு திமுக அரசியல் ஆதரவு தேவை பட்டபொழுது அதனை உபயோகப்படுத்திக்கொண்டார். (அவர் தந்தை திமுகாவில் இருந்தது காரணமாக திமுக ஆதரவு என்பது அவர் ரத்ததில் ஊறியதாக இருக்கும்.) அதே நேரத்தில் அது தன் முன்னெற்றத்துக்கு இடையூராக சமீப காலங்களில் வரத்தொடங்கியதால் திமுக ஆதரவு பிம்பத்தை விட்டு வெளிவர முயன்றார். கூடவே கருணாநிதிக்கு பின் ஏன் தயாநிதி வரக்கூடாது என்ற எண்ணமும் ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் உறுத்தியது. தானாக நடுநிலை என்பதை விட ஒரு சண்டை வந்து பிரிந்தால் தான் அது நம்பப்படும் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக ஸ்டாலின் எதிர்ப்பு/புறக்கணிப்பு வழியில் இறங்கினார்.. இதனால் ஸ்டாலினை ஓரம் கட்டலாம்.. ஓரளவு ஓரம் கட்டியபின் தயாநிதியை திமுக வாரிசாக முன்னிலைப்படுத்தலாம்/திமுக ஆதரவு பிம்பத்தை உடைக்கலாம் என்பதே அவர் நிலை. கருணாநிதிக்கும் முரசொலி மாறம் மேல் இருக்கும் பற்று காரணமாக தயாநிதியை மத்திய மந்திரியாக்கி அழகு பார்த்தார். மீடியா ஆதரவு தேவை + மாறன் பற்றால் அவர்கள் செய்வதை சகித்துக்கொண்டு அதே சமயம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தார்..
மாறன் சகோதரர்களின் அடுத்தக் கட்டமே இந்த கருத்துக்கணிப்பு + மதுரை சம்பவம் + தயாநிதி ராஜினாமா.

கூடவே.. இது ஒரு நேர்க்கோடான கதை போல் சொல்ல முடியாது என கருதுகிறேன்.. இது பல காலகட்டங்களில் வெவ்வேறு மனநிலைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் கலவை.

மாறன்ஸ் இதுவரை சரியாக காய் நகர்த்தி வந்தாலும் கருணாநிதி தட்ட வேண்டிய நேரம் பார்த்து (மாறன்ஸ் புரிந்து கொள்ளும்படி) தட்டி விட்டார் என்றே கருதுகிறேன்.

மாறன்ஸ்க்கு தான் அகலக்கால் வைத்தது/சரியாக எடை போடாதது இப்பொது புரிந்து விட்டது. மு.க இருக்கும்வரை இனி அடக்கி வாசிப்பார்கள். அதற்குள் மு.க தேவையான காய்களை நகர்த்தி விடுவாரா? பார்க்கலாம்..
சதுரங்க ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. எதிராளியை குறைவாக எடை போடக்கூடாது என்ற பாடத்தை மாறன்ஸ் புரிந்து கொண்டார்கள்.. பதிலுக்கு காய் நகர்த்துவார்களா இல்லையா என்பதை காலமும் சூழ்நிலைகளும்தான் நமக்கு சொல்லும்.

இப்போதைய சூழ்நிலையில் மாறன் திமுகாவில் இருந்து( மற்றவர்கள் பார்வைக்கு) விலக்கியே வைக்கப்படுவார். ஆனால் தன் MP பதவியை ராஜினாமா செய்யமாட்டார்.. செய்தால் தேர்தலை சந்திக்க வேண்டி வரும்.. திமுகாவுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்திருந்தால் இதனை செய்திருக்கலாம். திமுகாவை விட்டு மாறனோ சன் மீடியாவை விட்டு திமுகாவோ (உண்மையாக) விலகாது.
நடந்து முடிந்து விட்டதை இரு தரப்பும் தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக்கொல்லும்.. வெளியில் எதிரெதிராக இருப்பதை போன்ற பின்பத்தை ஏற்படுத்தி
1.தன் வியாபாரத்தை விஸ்தாரமாக்கி கொள்வார்கள்.
2.சன்/தினகரன்/தமிழ்முரசு செய்திகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவார்கள். (அது திமுக சாதகமாகவே இருக்கும்).


ஆனால் இந்த அரசியல் விளையாட்டுக்களால் தன் உயிரை இழந்துவிட்ட அந்த மூன்று குடும்பங்களுக்கும் பதில் சொல்பவர் யாரோ???



நண்பர் தேவின் "கலாநிதி மாறன் - நிழல் அரசாங்கம்" பதிவிற்கு நான் போட்ட பின்னூட்டம் இது பதிவாக உங்கள் பார்வைக்கு.

Monday, April 16, 2007

அச்சு கலக்கப் போவது நீங்களா?

என் பதிவை பார்த்ததுமே இருக்கும் ஆணியையெல்லாம் அம்போவென விட்டுவிட்டு வந்து ஆவலுடன் படித்துக்கொண்டிருக்கும் லட்சோப லட்ச வாசகர்களே...

இதோ உங்களுக்கு ஒரு சவால். கைப்பூ எனும் ஒரு மாவீரனை கூட்டமாக கூடி கும்மியடித்து அப்பு கொடுத்து அனுப்பி விட்ட வவாச எனும்
பதிவுலக வாசகர்களின் அங்கமாகிவிட்ட சங்கம் ஒரு போட்டி அறிவித்துள்ளது. என்னா போட்டின்னு பின்னாடி சொல்றேன்..


வக்கப்போர (வைக்கோல் போர்) பாத்துபுட்டு "போர் பல கண்டவன்"னு சொல்லிகிட்டு தளபதியாகிட்ட தேவும் ஆனை கட்டி போரடித்த பொண்ஸும் சேந்து இத ஆரம்பிச்சி ஒரு வருஷம் ஓடிடுச்சாம். சரி என்னாய்யா பண்ணியிருக்கங்கன்னு பாத்தா ஒன்னும் சொல்றாப்புல இல்ல..அணி சேராத அணிகள் மாதிரி கோஸ்டி சேராத அளுங்க நாங்கன்னு சொல்லியே ஒரு கோஸ்டிய சேத்துகிட்டு வரவன் போறவன் எல்லாரையும் சிரிக்க வச்சி அனுப்பி இருக்காங்க. மாசம் ஒருத்தன கூப்டு வச்சி கும்மராங்க..அத பாத்து சுத்தி இருக்கர எல்லாரும் மட்டுமில்ல அந்த பயபுள்ளயும் சேர்ந்தே சிரிக்குது.. சிரிச்சிக்கறது சிரிக்க வக்கிறது இத தவிர வேற ஒன்னும் உருப்படிய செய்யல..


சரி..அது என்னா போட்டி தெரியுமா?? பதிவெழுதி சிரிக்க வைக்க வைக்கிற போட்டியாம்...(நானெல்லாம் பதிவெழுதறதே ஒரு சிரிக்கிர விஷயம்தானேன்னு யாரும் முனுமுனுக்ககூடாது.) அதுக்கு பரிசு வேற கொடுக்கறாங்களாம்.. ஆனா என்ன? காசா கொடுத்தா குவார்ட்டர் அடிச்சிட்டு கவுந்துடுவோம்னு தெரிஞ்சி பொஸ்தகமா கொடுக்கறாங்க.. (ம்ம்.. படிக்கிற காலத்துலேயே நாங்க படிச்சதில்ல..இப்ப மட்டும் படிச்சிடுவோமா என்ன?)


போட்டி முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கு... இதுல எல்லாரும் கலந்துக்கனும்னு கேட்டுக்கறேன்..இவங்க நீங்க அனுப்பர காமடி பதிவுல எத எடுக்கறது..எத்க்கு பரிசு கொடுக்கறதுன்னு தெரியாம முழிக்கனும்.. திணரனும்.. சொல்லிபுட்டேன்... அந்த பதிவுகள படிச்சி எல்லாரும் சிரிக்கனும்.. சரியா?????


நெக்ஸ்ட் மீட் பன்னுவோம்.. வர்ட்டா?



மேலும் விபரங்களுக்கு :
http://vavaasangam.blogspot.com/2007/04/blog-post_6576.html
எழுத ஆரம்பிக்கும் முன் முக்கியமாக விதிமுறைகளைகளை படிக்கவும்.

இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் வவாசவுக்கு என் இனிய வாழ்த்துக்கள். மேலும் பல ஆண்டுகள் இந்த சங்கத்தின் சேவை தொடரவேண்டும் என விரும்புகிறேன்.அதற்கு வாசகர்களாகிய நாம் நம்முடைய ஆதரவை தொடர்ந்து வழங்குவோம் எனவும் நிச்சயமாக நம்புகிறேன்.


வவாச,
வாழ்க வளர்க.

Thursday, April 12, 2007

ரஜினி/சிவாஜி - சில கேள்விகள் - என் பதில்கள்.

சமயம் கிடைக்கும்பொழுதெல்லாம் ரஜினி மீது புழுதி வாரி தூற்றுவதும் அவர் மீதோ இல்லை திரைத்துறையின் மீதோ அக்கறை என்ற போர்வையில் அவரை மட்டம் தட்ட முயற்சிப்பதும் சிவாஜி படம் தோல்வியடைய வேண்டும் என அங்கலாய்ப்பதும் நடக்கிறது. அவற்றில் ரஜினி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அல்லது கேட்கப்படும் கேள்விகளுக்கான என் பதில்களே இந்த பதிவு.

1. வயதான காலத்தில் டூயட் பாடுகிறார்
இதனை சொல்பவர்களை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது.அவர் என்ன கல்யானத்துக்கு பெண்ணா கேட்கிறார்? வயதை பற்றி கேள்வியெழுப்ப? இது ஊடகம். இங்கு திரையில் தெரிவதுதான் வயது. பார்ப்பவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா இல்லையா என்பதுதான் முக்கியம். அவர்கள் ஒப்புக்கொள்கையில் 20 வயது இளைஞன் 60 வயதுக்காரராகவும், 60 வயது பெரியவர் 20 வயது இளைஞனாகவும் நடிக்கலாம். இதில் என்ன தவறு? என்ன பிரச்சினை??? சத்தியராஜ் பெரியார் படத்தில் இளவயது பெரியாராகவும் வருகிறாராமே.. அது தவறா? அதை விடுங்கள். திரைத்துறையில் வெற்றி பெற்ற பல நடிகர்களை பாருங்கள். கமல்,அமிதாப், ஷாருக், சிரஞ்சீவி, மம்முட்டி,மோகன்லால், இப்படி அடுக்கிகொண்டே போக முடியும். இவர்கள் அனைவரும் இளைஞர்கள் அல்லவே? ஹீரோவாக நடிக்ககூடாதா? டூயட் பாடக்கூடாதா? ஸ்ரீதேவி எவ்வளவு காலம் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தார்?

அது மட்டுமின்றி எனக்கு தெரிந்தவரை அவர் ஒருவர்தான் வெளியில் வேஷம் போடாமல் தன் நிஜ வயதை மறைக்காமல் இருப்பவர்.படங்களில் மட்டுமே வேஷம் போடுபவர். அவரை பார்த்து இப்படி சிறுபிள்ளத்தனமான கேள்விகள் எழுப்புபவர்களை பற்றி மேற்கொண்டு என்ன சொல்ல???

2. ரஜினியின் அரசியல் ஈடுபாடு/அணுகுமுறை
ரஜினி அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை.(விருப்பமில்லை என்பதை தகுதியில்லை என சொல்வதாக அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டாம்). அதே போல் அவர் வரப்போகிறேன் என பூச்சாண்டி காட்டுவதும் எனக்கு பிடிக்கவில்லை. அதே நேரத்தில் இதை ஒரு பெரிய குற்றமாக பேசுவதை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. அரசியல் என்பது ஆட்சி அதிகாரம் மூலம் நன்மை செய்ய ஒரு வாய்ப்பு என்பது பெயரளவில் கூட இல்லை. அரசியல் செய்ய நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. பல குள்ளநரித்தனக்களையும் சமாளிக்க, எதற்கும் எப்பொதும் அடுத்தவரை குறைகூற, தன்னையும் தன் கட்சியையும் தற்காத்துக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும். இதீல் எதுவும் ரஜினிக்கு ஒத்துவரும் என என்னால் நம்பமுடியவில்லை. அப்படிப்பட்ட அரசியலில் நுழைவதற்கு தயக்கம் காட்டுவது தவறு அல்ல. அரசியலில் அவரின் செயல்பாடுகள் நிச்சயமாக சிறப்பானதாக இல்லை. ஆனால் குற்றம் சுமத்தும் அளவுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. அவர் அரசியலுக்கு வருவதாக சொன்னதால் இப்பொழுது என்ன கெட்டுப்போய் விட்டது? ஏன் இந்த கூச்சல்? ஏற்கனவே ஒரு பதிவில் நான் சொன்னது கீழே:
//அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம்...அப்படியே அவரை நம்பி காத்திருந்தாலும், பாதிக்கப்பட்டதாக சொல்வது அவர் ரசிகர்கள்தானே?உங்களுக்கு ஏன் இந்த நீலிக்கண்ணீர்?//



3.ரஜினி தரமான படங்களில் நடிக்க வேண்டும்.
திரைப்படத்துறையை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு நடிகர்/இயக்குனரிடம் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டோம். ரஜினியை சுற்றி ஒரு வட்டம் போடப்பட்டுவிட்டது. அதனை தாண்டுவது எளிதல்ல. (ஒரு சிறிய எடுத்துக்காட்டு: ஷங்கர் காதல் படத்தை தான் இயக்கி இருந்தால் தோல்வியடைந்து இருக்கும் என சொன்னது) தாண்டும் ஆசை அவருக்கும் இருக்கும் என நான் நம்புகிறேன். ஆனால் இது ஒரு சிலரின் தனிப்பட்ட ஆசை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.. பலரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. ரஜினி படம் தோல்வியடைந்தால் அதன் பாதிப்பு சாதாரணமானதல்ல. பலரை பாதிக்கும்.
நான் சொல்வது ஆசை வேறு. நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் வேறு என்று..ரஜினி படங்களின் தரம் மேலும் உயரவேண்டும் எனவே நானும் விரும்புகிறேன். பல ரசிகர்களுக்கும் இந்த ஆசை இருக்கும் என்றே நம்புகிறேன்.

அதே சமயம் நாம் கலை என்பது ரசிப்பவர்களுக்கு அவர்கள் விருப்பத்தை கொடுப்பதும்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படி கொடுப்பதில் ரஜினிக்கு நிகர் யாருமில்லை என்பது நிதர்சனம்.

4.சிவாஜியால் தரம் கெட்டுவிடும்
சிவாஜி படம் வெளிவருவதற்கு முன்பே யூகங்களின் அடிப்படையில் சொல்லப்படும் குற்றச்சாட்டு இது. இந்த படம் வருவதால் திரையுலகம் கெட்டுப்போய்விடும். 5 வருடம் பின்னோக்கி போய்விடும் என்பது எந்த விதத்திலும் சரியான வாதமல்ல.. சிவாஜி வெற்றிபெற்றால் சேரனும் பிரகாஷ்ராஜும் மசாலா படம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் என கூறுகிறீர்களா?? இல்லை மக்கள் அது போன்ற படங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டர்கள் என சொல்கிறீர்களா? VCDயில் படம் பார்த்தவர்களை திரையரங்குகளுக்கு மறுபடியும் அழைத்து வந்து திரைத்துரைக்கு பெரும் பேறு செய்த படம் சந்திரமுகி. இதையெல்லாம் மறந்து விட்டு பேசுவது துரதிஷ்டமே.. இதனை பற்றி சிவாஜி படம் வெளிவந்த பின் பேசுவது மட்டுமே சரி.

5.ரஜினிக்கு நடிக்கத்தெரியாது.

இதற்க்கெல்லாம் பதில் சொல்லக்கூடகூடாது.. நடிப்புத்துறையில் 30 ஆண்டு காலம் கொடிகட்டி முடிசூடா மன்னனாக திகழும் ரஜினியை பர்த்து நடிக்கத்தெரியாது என்பதை பார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது.மேற்கொண்டு பேச எதுவுமில்லை.

மேற்கொண்டு ஏதுவும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. விவாதிக்கலாம்..சரியான முறையில்.


ரஜினிக்கும் சிவாஜிக்கும் எதிராக எழுதப்பட்ட பல பதிவுகளை பற்றி:

அப்படிப்பட்ட பதிவு ஒன்றில் ராஜ்குமார் என்ற ஒரு வாசகர் இட்ட பின்னுட்டத்தை 100% சரி என நான் நம்புவதால் அதையே அந்த பதிவுகளை பற்றிய என் பார்வையாக வைக்கிறேன்.

"ரஜினி என்ற தனிமனிதனின் புகழ் மீதான காழ்புணர்ச்சியை, அறிவு ஜீவித்தனமான வாதங்களை முன் வைத்து வெளிப்படுத்தியுள்ளீர்கள்.இவ்வாதங்களில் துளிக்கூட நேர்மை கிடையாது.யூகங்களிம் அடிப்படையில், சினிமா வரலாற்றையும் முழுமையாக பிரதிபலிக்காமல் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை கண்டிப்பாக பரபரப்பு ஏற்படுத்த எழுதப்பட்டுள்ளதே தவிர, வேறு எதற்காகவும் இல்லை"


நான் பார்த்தவரை ரஜினி ரசிகர்கள் நல்ல படங்களை பற்றி பாரட்ட தவறியதே கிடையாது.யாரையும் தவறாக பேசியது கிடையாது. ரஜினியை பற்றி தவறாக எழுதி சீண்டி விடும்நேரங்களில் சிலது சொல்லி இருக்கலாம். அவ்வாறு சீண்டி விடுவதை கோழைத்தனமாகவே நான் நினைக்கிறேன். அக்கரையுடன் எழுதப்படும் பதிவுகள் என்பது உண்மையானால் அது சரியான விவாதக்களத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும். அப்படியில்லமல் ரஜினியை பற்றி தவறாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றிவிட்டு நான் அக்கரையுடன் சொல்கிறேன் என்பது சரியா??

சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் நடிப்பின் மூலம் ஈர்த்துள்ள ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம்தான். அசைக்க முடியாத ஒரு சக்திதான். உயர்ந்த இடத்தில் இருந்தாலும் துளியும் கர்வமின்றி எளிமையாக இருப்பவர். ஒரு கலைஞனை தாராள மனதுடன் பாரட்டுவது ஊக்கப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. இதுவும் அனைவருக்கும் தெரிந்தது. இருந்தும் ஏன் அவர் மேல் இந்த கோபம்? பாபா தொல்வியடைந்ததும் ரஜினி சகாப்தம் முடிந்தது என நம்பியதில் மண் விழுந்ததால் வந்த எரிச்சலா????

Monday, March 26, 2007

சொந்த செலவுல சூனியம்...

இந்த வார ஸ்டார் சாரி சாரி..சூப்பர் ஸ்டார் தேவோட மடல்ன்னாலே ஒருவித எதிர்பார்ப்போட திறந்து பாக்குறது வழக்கம்.. ஆனா அதுல ஆப்பையும் அட்டாச் பன்னி அனுப்புவருன்னு தெரியாம போச்சு... 3 நாளைக்கு முன்னால வந்த மின்மடல்தான் அது.. ஆனா அப்பகூட அது என்ன ஆப்புன்னு புரியல.. சரின்னு அவர்கிட்டேயே என்னல இதுன்னு கேட்டேன்.. அதுவா.. அது "நான் ஒரு கிறுக்கு"ன்னு சொல்லனும்.. சும்மா சொன்னா பத்தாது. அதுக்கு சப்போர்டிங்கா 5 சாம்பில் கொடுக்கனும்.. அத படிக்கிறவங்க ஆமா இவன் ஒரு கிறுக்குதான்னு ஒத்துக்கனும்.அவ்வளோதான் அப்ப்டின்னாரு. என்னய்யா இது..சரியா புரியலியே.. அது இருக்கட்டும்.. நான் ஒரு கிறுக்குன்னு உனக்கு தெரிஞ்சுது..சரி..அத ஏன்யா ஊருக்கு வேற சொல்லனும்னு கேட்டா நாம எல்லாம் ஒரு குரூப்பாத்தாம்லே கெளம்பி இருக்கோம்.. நீ தனி ஆள் இல்ல, அச்சப்படாம ஆடுன்னு சொன்னாரு.இன்னும் கொஞ்சம் தெளிவா விசாரிச்சப்புரம்தான் தெரிஞ்சது..கைப்பூ ரொம்ப நாளா எஸ் அகிட்டதால ஆப்பெல்லாம் பெண்டிங்ல இருக்காம்.. அத ஆளுக்கு அஞ்சு அஞ்சா பிரிச்சி அவங்கவங்களே எடுத்து தனக்குத்தானே வச்சிக்கிற விளையட்டாம். சொந்த செலவுல சூனியம்னா என்னான்னு புரியாதவங்களுக்கு புரிய வைக்கிற மாதிரி விளையாடனுமாம். விட்டா யாரு பெரிய கிறுக்குன்னு சார்வேசன் சார்வே எடுப்பாரு போல...அதுக்கு வாடா ராசான்னு அன்போட(ஆப்போட) கூப்பிடுற மடல்தான் அது.

சரி..ஆட்டத்த ஆரம்பிக்கிறேன்..

1. இந்த கிறுக்குத்தனமா யோசிக்கிறது நமக்கு கை வந்த கலைங்க. சின்ன வயசுல யோசிக்கிறது எல்லாமே அப்படித்தான் இருக்கும்.. ஒரு காலத்துல என்ன சுத்தி இருக்கர உலகம் எனக்காகவே உருவாக்கப்பட்டதோன்னு தோனும்..என்னை தவிற எல்லாருமே எனக்காக நடிக்கிறாங்களோன்னு தோனும்..இது போலவே எல்லாருக்கும் தனித்தனி உலகம் உறுவாக்கப்பட்டு இருக்கோன்னு வேற தோனும்.. இந்த மாதிரி யோசிச்சி யோசிச்சி மண்ட காஞ்சதுதான் மிச்சம்.. ஒரு பதிலும் கிடைக்கல.. போகப்போக இந்த மாதிரி யோசிக்கிரத விட்டுட்டேன்.

2. புத்திசாலித்தனமா காமிச்சுக்க நினைச்சி பல்பு வாங்கறதும் ஓரளவு பழக்கம்தானுங்க.. இப்படித்தான் 5 வருஷத்துக்கு முன்னால முதல் தடவையா பெங்களூர் வந்துட்டு ஆட்டோவுல போகும்போது (சென்னை அனுபவம்) அவன் ஊர் சுத்தி கூட்டிகிட்டு போயிடுவானோங்கர சந்தேகத்துல எந்த வழியா போறீங்கன்னு கேட்டேன்.. அதுக்கு அவன் சொன்ன பதில் : "உங்களுக்கு எந்த வழியா போகனும்?"

3. கோபம் எனக்கு ரொம்ப அதிகமா வரும்.. இது weirdaa இல்லயான்னு தெரியல.. ஆனா அடுத்தவங்க சாதாரணமா எடுத்துக்கர பல விஷயங்கள் எனக்கு கோபத்தையும் எரிச்சலையும் கொடுக்கும். கேனத்தனமா டிரபிக்க ஹேண்டில் பன்ற டிரபிக் கான்ஸ்டபில் முதற்கொண்டு பொதுவாக தேவையில்லாத/அடுத்தவரை பற்றி கவலைப்படாத/எதனையும் grantedஆக எடுத்துக்கிற எல்லா விஷயத்துலயும் கோபம் அதிகமா வரும்.அந்த கோபத்தால பயன் இல்லன்னு தெரிஞ்சாலும் மனது நீண்ட நேரத்துக்கு ஆறவே ஆறாது.

4. சிறு வயதில் பயம் அதிகம். சில விஷயங்கள எதிர்கொள்ளவே தைரியம் கிடயாது.. இப்படித்தான் ஒரு முறை வீட்டுக்கு பக்கத்தில் உள்ள முனிசிபல் ஆபிசில் பசங்களுடன் விளைடாடும்பொழுது ஏறத்தெரியாமல் மரம் ஏறி கீழே விழுந்தேன்.. விழும்பொழுது உடைந்து இருந்த மரக்கிளையில் கால் மாட்டி அந்தரத்தில் தொங்கி கால்சதையின் பெரும்பகுதி கிழிந்து விட்டது.. அதை வீட்டில் சொல்ல பயம்.. டாக்டரிட்ன் கூட்டிப்போய் என்ன செய்வார்களோ.. தாங்க முடியுமா என பயந்துகொண்டு 2 நாட்கள் வீட்டில் சொல்லாமலேயே (கடுமையான ஜூரம் வேறு) இழுத்துப்போர்த்திக் கொண்டு படுத்துக்கிடந்தேன், என் அண்ணன் என் கால்களில் இருந்த ரத்தத்கறையை கண்டுபிடிக்கும்வரை.

5. இன்னும் முடியலியா.. சரி.. இந்த ஐஸ்கிரீம் இருக்கு பாருங்க. அத நல்லா கொழச்சி தன்னியாட்டம் ஆக்கி சாபிடுறது எனக்கு பிடிக்கும். :-) என்ன
பப்ளிக்கா அப்படி சாப்பிட முடியாது.. :-(

அப்பா.. ஆடி முடிச்சாச்சு.. என்னாது.. இன்னும் அஞ்சு பேர நான் கூப்பிடனுமா????

சரி..எனக்கு தெரிஞ்ச கிறுக்கங்க அல்லது முட்டாப்பசங்க இவங்கதான்.. அவங்க அவங்கள பத்தி தனியா பதிவு பொட்டு சொல்லனும்னு தேவையில்லன்னு நினைக்கிறேன்.

1. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்
2. அரசியல் கட்சிகளின் உண்மையான தொண்டர்கள்
3. நேர்மையாக நடக்க நினைக்கும் அதிகாரிகள்.
4. _________
5. _________
4ம் 5ம் உங்க சாய்ஸ்..fill in the blanks.. யாருன்னு சொல்லுங்க..

Wednesday, March 07, 2007

DD Vs Nimbus

ஏற்கனவே நொந்து போய் இருக்கறவங்கள நானும் சேர்ந்து தொல்ல பண்ண வேணாம்கற நல்லெண்ணத்துல(??!!) நம்ம கடைய பூட்டி சாவிய எங்கிட்டோ போட்டு ரொம்ப நாள் ஆச்சுங்க.. மத்த கடைய அப்பப்ப பாத்து ஏதாவது சில்லறையா வாங்கறதோட சரி.. அதுவும் இப்ப ஒரு கடையில 30 க்கு மேல பப்ளிக்கா வாங்க கூடாதுன்னு வேற சொல்லிட்டதால, நல்லாதா நாலு பெரு அந்த 30அ வாங்கட்டும்னு விட்டுடறதும் உண்டு..

ஆனா பாருங்க பூட்டியிருந்த நம்ம கடைக்கும் நெத்து ஒருத்தர் விஸிட் கொடுத்தாரா... இன்னைக்கு செய்தியில கேட்ட ஒரு விஷயம் வேற எரிச்சல கிளப்பிடுச்சா.. சரி இத பத்தி நம்ம ஆளுங்க என்னா நினைக்கிறாங்கன்னு கேட்டுடலாம்னனு தோனுச்சு.. அதான் தேடுடா சாவிய... தொரடா கடையன்னு கைப்பிள்ள கணக்கா கிளம்பிட்டேன்.

சரி.. விஷயத்துக்கு வரேன்..இதான் அது.

Handicapped by the sports Ordinance biting into their advertising revenues, Nimbus today threatened to pull out of its Rs 2,714 crore five-year telecast deal with the Board of Cricket Council of India (BCCI)

தற்போதைய பிரச்சினை தூர்தர்ஷனின் உலகப்கோப்பை ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், இந்தியா தவிர மற்ற சில நாடுகளிலும் தெரியப்போவதுதான். இது nimbusக்கு கடுமையான வருமான இழப்பை கொடுக்கும்.

ஆரம்பத்தில் இருந்தே இதில் நமது தூர்தர்ஷன் செய்வது கொஜ்சம் கூட சரியில்லை என்பது என் கருத்து. இன்றைய காலங்களில் கிரிக்கெட் என்பது பார்வையாளரை பொறுத்தவரைதான் விளையாட்டு. ஆனால் அதனை ஒளிபரப்புபவர்களுக்கு அது ஒரு வியாபாரம். மிக கடுமையான போட்டியுள்ள ஒரு வியாபாரம். 50 ஓவர் விளையாடவேண்டிய ஒரு அணி 48 ஓவரில் ஆட்டமிழந்தாலே (அந்த 10 நிமிடத்தில் காட்டவேண்டிய விளம்பரங்களால்) அதனால் ஏற்படும் வருமான இழப்பை பற்றி கவலைப்படும் அளவுக்கு.

அப்படிப்பட்ட வியாபாரக்களத்தில் தூர்தர்ஷன் முதலீடு செய்யாமலேயே அடுத்தவனின் லாபத்தில் ஒரு கனிசமான பங்கை எடுத்துக்கொள்ள முயல்வதாகவே தோன்றுகிறது. மக்களின் நலன் கருதி என்ற பெயரில். இது சரியா? இதற்காக ஒரு சட்டமே இயற்றியுள்ளது எந்த விதத்தில் நியாயம்?
கடந்த காலங்களில் போட்டி நடக்கும் ஒரு வாரத்துக்கு முன் யாராவது பொதுநலமனு ஒன்றை போட்டு அதன் மூலம் நீதிமன்றமும் DDயுடன் ஒளிபரப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும்என்ற தீர்ப்பை வழங்கும். தனியார் தொலைகாட்சிகளுக்கு நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் DDயோ போட்டியைவிட அதிகமாக விளம்பரங்களை ஒளிபரப்பி நல்ல லாபம் பார்க்கும். (ஒரு ஓவரின் முதல் பந்தையும் கடைசி பந்தையும் பார்க்கவே முடியாது.)

இப்போது இந்தியா பங்கேற்கும் எல்லா போட்டியையும் யார் ஒளிபரப்பு உரிமை பெற்றிருந்தாலும் அவர்கள் DDக்கு தங்கள் ஒளிபரப்பை கொடுக்க வேண்டும் என ஒரு சட்டமே இயற்றிவிட்டார்கள். இதில் DDக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 3/4ஐ அந்த தனியார் தொலைக்காட்சியிடம் DD செலுத்தும். மீதி 1/4 DDக்கு. ஆனால் மொத்ததில் தனியார் தொலைக்காட்சிக்கு பெரும் இழப்பு இது.

வேண்டுமெனில் DDயே நேரடியாக ஒளிபரப்பு உரிமையை பெற வேண்டியதுதானே? அதை ஏன் அவர்கள் செய்வதில்லை? அதேபோல் தனியார் தொலைக்காட்சிகளும் ஏன் DDயை தனியாக விளம்பரங்கள் ஒளிபரப்ப ஒப்புக்கொள்கின்றன என்பதும் எனக்கு புரியவில்லை. தாங்கள் ஒளிபரப்புவதை அப்படியே DD ஒளிபரப்ப வேண்டும் விளம்பரங்களையும் சேர்த்து என கூறுவதுதானே? அதன் மூலம் இவர்கள் விளம்பரங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும். யார் எதில் பார்த்தாலும் ஒன்றுதான். வருமான இழப்பு ஏற்படாது என தோன்றுகிறது. இதனால் DDக்கு வருமான இழப்பு கொஞ்சம் ஏற்படலாம். ஆனால் மக்களுக்கு தொண்டு செய்வதற்காக அது அதனை ஒப்புக்கொள்ளும் என நம்புவோமாக :-)

எப்படி பார்த்தாலும் DD செய்வதும் புதிய சட்டமும் தர்மமாகாது என நினைக்கிறேன்.. உங்கள் கருத்து????

Saturday, October 07, 2006

மதம் தேவையா?

நண்பர் ஜோ அவர்களின் பதிவில் இந்த வரிகளை கண்டேன்..

//எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு மத நம்பிக்கை கிடையாது//
இது சரியான மற்றும் தேவையான அணுகுமுறை என்றே தோன்றுகிறது..அவரின் வரிகள் என்னை யொசிக்க வைத்தன.. அதன் விளைவே இந்த பதிவு.. என் மனதுக்கு தோன்றியவைகளை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.. இதுதான் சரி என்றோ, தவறு என்றோ நான் கூறவில்லை.. ஏனெனில் நான் சரி என்று நினைத்த பலவற்றை தவறு எனவும் தவறு என நினைத்த சிலவற்றை சரி எனவும் பின்னாளில் முடிவு செய்து இருக்கிறேன்.. இன்றைய என் நம்பிக்கை நாளை பொய்க்கலாம். இது அனைவருக்கும் பொருந்தும் என்பது என் எண்ணம். அதே போல், நான் என்றும் மதம் சார்ந்த பதிவுகளையோ அதன் சர்ச்சைகளிலோ சிக்க கூடாது என நினைத்தவன்.. இருந்தாலும் இந்த பதிவு நல்ல முறையில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் இதனை உங்கள் மனதுக்கு கொடுக்கிறேன்.

நானும் யோசித்து பார்க்கையில் இது போன்றே பல தருணங்களில் உணர்ந்து இருக்கிறேன்.. பல நேரங்களில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும், இருந்து இருக்கிறேன். கடவுள் இருக்கிறாரா அவர் நல்லவரா? என்றெல்லாம் பல முறை கேள்விகள் எழுந்ததுண்டு.(அதற்கு முக்கிய காரணம் பிறப்பினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வேற்றுமைகள். ஒரு முறை என் பெற்றோரின் திருமண நாளை ஒரு ஆதரவற்றோர் விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டாடினோம்.. அன்று நான் சந்தித்த குழந்தைகளின் நிலை என்னை சாட்டையால் அடித்தது போல் இருந்தது... நான் என்ன நன்மை செய்ததால் இன்று அவர்களை விட சற்று வசதியான இடத்தில் இருக்கிறேன்? என்ன தீமை செய்ததால் அவர்கள் மற்றவரிடம் உணவுக்கும் மற்ற அடிப்படை வசதிகளுக்கும் கையேந்தும் நிலையில் இருக்கிறார்கள்? எனக்கு கிடைத்த பதில் நான் பிறந்த இடமும் அவர்கள் பிறந்த இடமும் தவிர வேறு காரணம் இருப்பதாக தோன்றவில்லை. இது பற்றி மேலும் பேசினால் பதிவு வேறு திசைக்கு திரும்பும் என்பதால் இதனை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்)
அது போலவே, கடவுள் இருக்கிறாரா/நல்லவரா என்று எத்தனை கேள்விகள் எனக்குள் தோன்றுகிறதோ கிட்டதட்ட அதே அளவு கேள்விகள் கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதரவாகவும் தோன்றுகின்றன.

எதனையும் அறுதியிட்டு முடிவுக்கு வர முடியாததுதான் இதன் முடிவு. எந்த ஒரு மனிதனையும் மனிதனாக மதிக்க வேண்டும் என்பதே என்றும் என் நிலைப்பாடு..

மதம் ஒவ்வொருவருக்கும் அவரது (அவர்களால் கட்டுப்படுத்த முடியாத)பிறப்பினால் அடையாளமாகிறது.. உலகில் ஒரே ஒரு மதம்தான் உண்மை என்றால், மற்ற மதத்தில் மனிதர்கள் தோன்ற காரணமான அந்த கடவுளே குற்றவாளி.
இதனை பிடித்துக் கொண்டு கொஞ்சம் மேலே போனால், மற்ற மதங்கள் ஏன் தோன்றின? தோன்ற வேண்டிய அவசியம் என்ன? ஏன் கடவுள் அதனை கட்டுப்படுத்த வில்லை. ஏன் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பதில்லை?(ஒரு மனிதனை உறுவாக்குவது அவனுடைய சூழ்நிலைகளும் அவன் சந்திக்கும் மனிதர்களும்தான். அதனையும் அவன் கட்டுப்படுத்த முடிவதில்லை.)
இது போல இன்னும் பற்பல கேள்விகள் பிறக்கின்றன..

ஆனால் ஒன்று.. மதங்களின் (சரியான) பழக்கங்களை பின்பற்றுகையில் மனிதன் தவறுகள் செய்யாமல் தன்னை காத்துக்கொள்கிறான். எப்படி சட்டங்கள் ஒரு குடிமகனை தவறுகள் செய்தால் தண்டனை உண்டு என பயமுறுத்தி அவன் தீய வழியில் செல்லாமல் இருக்க பயன்படுகிறதோ அது போல. ஆகவே மனித குலத்திற்கு பாதை தெரிந்து நடக்க மதங்கள் தேவை. இந்த நிலையிலேயே மதங்களுக்கான மதிப்பு இருக்க வேண்டும்.
அடுத்தவர் மதத்தினை, நம்பிக்கைகளை மதிக்க கூடிய மனநிலை காலத்தின் கட்டயமாகிறது.. அதே நேரத்தில் அந்த நம்பிக்கைகள் மற்ற மனிதரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தவறாக இருப்பின் விவாதிக்ககூடிய, தவறு இருந்தால் மாற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும்.


சிறு வயதில் படித்த இந்த வரிகள் ஞாபகம் வருகிறது..
"மதம் என்பது குளிர் காலத்தில் எரியும் நெருப்பு போன்றது..தூர விலகினால் குளிரும்.. மிக மிக அருகில் நெருங்கினால் எரித்து விடும்."

Thursday, September 28, 2006

ஏமாத்திபுட்டீங்களே... திருமா தம்பி.

என்ன கொடுமை சார் இது?

கட்சிய உடைக்கறது, கடைசி நேரம் வரை வரை கூட்ட்ணியில இருக்க வச்சி அப்புரம் அணி மாற வைக்கறது, MLA க்களை அணி மாற வச்சி அறிக்கை விட வைக்கிறது,நடிகர்களை தன் பக்கம் இருப்பது போல் காட்டிக்கொள்வது..இது எல்லாத்தையும் வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்கறாங்களே..நியாயமா? அடுக்குமா?

அம்மா அந்த மாதிரி பன்னத ராஜதந்திரம் னு சொல்லிகிட்டு இருந்தோமே... அது எல்லாம் அம்மாவாலதான் முடியும்னு வேற வாய்சவடால் விட்டுகிட்டு இருந்தோமே.. கொடுத்த அல்வாவ முந்திரி, திராட்சையோட சேத்து இப்போ திருப்பி கொடுக்கறாங்களே.. இப்பொ எல்லாம் போச்சே...என்ன் பன்றதுன்னு புரியலியே...கண்ண வேற கட்டுதே..அய்யோ...அம்மா...

Monday, August 07, 2006

தண்ணீர்..தண்ணீர்..

திருப்பூரில் வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு பெற விண்ணப்பம் செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள்.. இன்று(07-08-06 7AM or 11AM) முதல் விண்ணப்பிக்கலாம்..முதல் 2000 பெருக்கு மட்டும் இனைப்பு முதலில் கொடுக்கப்படும் என அறிவித்து உள்ளார்கள்.

குடிதண்ணீருக்காக அங்கு அடிக்கும் நல்ல வெயிலில் ஒரு முழு நாள் நிற்க தயாராய் மக்கள்.

அதற்கு நேற்று 06-08-06 பகல் பணிரெண்டு மனி அளவில் நிற்கும் மக்கள் வரிசையில் ஒரு பகுதி


இந்த வரிசை நீன்ட தூரம் வரை செல்கிறது.




இந்த இணைப்பு தங்களால்தான் கொடுக்கப்பட்டது என கூறி அரசியல் ஆதாயம் தேடும் அனைத்து கட்சிகள்.

வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு தேவையான தண்ணீரை பெற இப்படியெல்லாம் மக்கள் அவதியுற வேண்டி இருக்கிறது :-(


படங்கள் : என் செல்போனில் கிளிக்கியது...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

பதிவுலகில் உள்ள அனைவருக்கும் (தாமதாமான) என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
இந்த நேரத்தில் எனக்கு மிக பிடித்த ஒரு சில வரிகள்..உங்களுக்காக...

Around the corner I have a friend
In this great city that has no end,
Yet the days go by and weeks rush on,
And before I know it, a year is gone

And I never see my old friends face,
For life is a swift and terrible race,
She knows I like her just as well
As in the days when I rang her bell,

And she rang mine.
We were younger then,
And now we are busy, tired men.
Tired of playing a foolish game,
Tired of trying to make a name.

"Tomorrow" I say "I will call on Jane"
"Just to show that I'm thinking of her"

But tomorrow comes and tomorrow goes,
And distance between us grows and grows.
Around the corner!-yet miles away,
"Here's a telegram sir-"
"Jane died today."
And that's what we get and deserve in the end.
Around the corner, a vanished friend.

If you love someone, tell them.
Remember always to say "what you mean".
Never be afraid to express yourself.
Take this opportunity to tell someone what they mean to you.
Seize the day and have no regrets.
Most importantly, stay close to your friends and family,
They have helped to make you the person you are today,
What it's all about anyway. Pass this along to your friends.
Let it make a difference in your day and theirs.

Thursday, August 03, 2006

பெப்ஸி கோக்கில் 24 மடங்கு பூச்சி மருந்து..

பெப்ஸி கோக்கில் 24 மடங்கு பூச்சி மருந்து இருக்கிறது என விஞ்ஞானம், சுற்றுச்சூழல் கழகம் ஆய்வு நடத்தி தெரிவித்து உள்ளது...

http://thatstamil.oneindia.in/news/2006/08/03/pepsi.html
http://www.ibnlive.com/news/pesticide-cola-poison-content-is-now-deadlier/17411-3.html

கொசுறு : அமரிக்கவில் பெப்ஸி கோக் சாம்பில்ஸை ஆய்வு செய்த பொழுது அதில் இந்த நச்சுப்பொருட்கள் எதுவும் இல்லை- நேற்றைய CNNIBN-ல் விவாதத்தில் சொன்ன செய்தி.


பெப்ஸி கோக் குடிக்கலாமா கூடாதா?

Monday, July 24, 2006

பிரின்ஸ்/பிரியதர்ஷினி

இந்த வார இறுதியில் பார்த்த செய்திகளில் பாதித்தவை இரண்டு...

1. 5 வயது சிறுவன் 50 மணி நேர போரட்டத்திற்கு பின் தவறி விழுந்து இருந்த குழியில் இருந்து மீட்கப்பட்டான்..ஒரு பிஞ்சு உயிர் காப்பற்றப்பட்டது...மீட்டவர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...இது தோல்வியில் முடிந்து விடுமோ என பயந்து கொண்டு இருந்தேன்...(இது போன்ற சில சம்பவங்கள் இதற்கு முன் தோல்வியில் முடிந்து கண்டு மணம் நொந்து இருந்தேன்).

அதே நேரம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? உயிரின் மதிப்பு அது போகும்போதுதான் கவனிக்கப்படுமா? இன்னும் எத்தனையோ பேர் இருந்து கொண்டே சாகிறார்கள்... இருக்கும் பொழுதே கவனிக்கலாமே... "மரணம் மட்டுமா மரணம்" என்ற லிவிங் ஸ்மைல் வித்யா வின் கவிதை நினைவுக்கு வருகிறது..கூடவே ஒரு சில அலுவலகங்கள் இருக்கும்பொழுது தேவைகளை கவனிக்கமல், வேலையை விட்டு போகிறேன் என சொன்னதும் onsite வாய்ப்பு கொடுப்பதும், சம்பளம் அதிகம் ஆக்கி கொடுப்பதும் ஞாபகத்துக்கு வருகிறது..

2. பிரியதர்ஷினி என்பவர் 12 ஆண்டுகளுக்கு முன் கற்பழித்து கொலை செய்யப்படுள்ளார்..அந்த வழக்கில் நீதிபதி இவன்தான் குற்றம் செய்தவன் என தெரிந்தும் சாட்சி சரியாக இல்லாததால் விடுதலை செய்வதாக அறிவித்து இருக்கிறார்கள். கொலை.. கற்பழிப்பு- இரண்டும் எவ்வளவு பெரிய குற்றங்கள்/பாவங்கள்?..இதனை செய்தவன் இப்பொழுது சட்டப்படிப்பு படித்து வருகிறான்.....பாவப்பட்ட அந்தப்பெண்ணின் 70 வயது தந்தை நியாயத்துக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்.

தப்பை சாட்சி இல்லாமல் செய்தால் தவறில்லையா? தண்டனை இல்லையா? இது ஒரு தவறான முன்னுதாரனமாக ஆகிவிடாதா?

கூடவே இவந்தான் தவறு செய்தது என எப்படி நீதிபதிக்கு சாட்சிகள் இல்லாமலும் எப்படி தெரிந்தது?...அப்பட்டமாக 100% தெரிந்தால் அதன் அடிப்படையில் தன்டனை கொடுக்க சட்டம் வழி செய்யுமா? அப்படி செய்தால் அது தவறாக பயன்படுத்தப்படுமே என்ற ஆதங்கமும் எழுகிறது.. என்னதான் இதற்கு தீர்வு?

Wednesday, June 28, 2006

தேன்கூடு போட்டி - சில யோசனைகள்

சமீபத்தில் அருமையான படைப்புக்களோடு தேன்கூடு போட்டி இனிதே நடந்து முடிந்தது..நல்ல படைப்புக்களை எழுத ஊக்குவிப்பதும், அதற்கு அங்கீகாரம் அளிப்பதும் இனிமையானவை.
அந்த போட்டியில் வாக்களிக்கும்பொழுது எனக்கு தோன்றிய சில யோசனைகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யோசனை 1:

ஒருவர் அதிக பட்சம் 3 படைப்புகளுக்கு மட்டுமே வாக்கு அளிக்கலாம்.. தன்னுடைய விருப்ப வரிசையையும் (1,2,3) தெரிவிக்க வேண்டும்..
தேன்கூடு அமைப்பளர்கள் ஒவ்வொருவருடைய முதல் விருப்ப பதிவிற்கு 3 புள்ளிகளும், இரன்டாம் விருப்ப பதிவிற்கு 2 புள்ளிகளும், மூன்றாம் விருப்ப பதிவிற்கு 1 புள்ளிகளும் வழங்க வேண்டும்.

வாக்கெடுப்பு முடிந்த பின் மொத்ததில் அதிக புள்ளிகளை பிடித்த 3 பதிவுகளை அந்த வரிசைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.
-------------------------
யோசனை 2:

ஒவ்வொரு வாசகருக்கும் மொத்தம் 10 புள்ளிகள் அளிக்கலாம்.. அவர்கள் அதனை அவர்களுடைய விருப்பப்படி எத்தனை படைப்புகளுக்கு வேண்டுமனாலும் பகிர்ந்து அளிக்கலாம்..

வாக்கெடுப்பு முடிந்த பின் மொத்ததில் அதிக புள்ளிகளை பிடித்த 3 பதிவுகளை அந்த வரிசைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.
-------------------------
யோசனை 3:

ஒவ்வொரு படைப்பிற்கும் வாசகர்கள் 1 முதல் 10 வரையில் புள்ளிகள் அளிக்கலாம்..

வாக்கெடுப்பு முடிந்த பின் மொத்ததில் அதிக புள்ளிகளை பிடித்த 3 பதிவுகளை அந்த வரிசைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.
-------------------------

மேலும் வாக்களிப்பு முறையை தெளிவாக வாக்கு அளிக்கும் இடத்தில் வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டும்..

இதை படிக்கும் அனைவரும் (தேன்கூடு அமைப்பளர்கள்/ வாக்களர்கள்/ படைப்பாளிகள்) இதை பற்றிய கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கெட்டுக் கொள்கிறேன்.

பி.கு : எனக்கு பிடித்த வலைதளமான தேன்கூட்டிற்கு எதுவும் சிறு பங்களிப்பு செய்ய முடியுமா என்ற நோக்கில்தான் இந்த பதிவை எழுதினேன்..குற்றமோ, குறையோ சொல்ல அல்ல.. இதை படிக்கும் வாசகர்கள்/தேன்கூடு அமைப்பளர்கள் அதனை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.. யாருக்கும் எதுவும் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கவும்.. உடனே இந்த பதிவு நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


வாசகர்களிடம் இருந்து வந்த யோசனைகள்

1. எழுதுபவரின் பெயரை தெரியப்படுத்தக்கூடாது.
(இதில் சில சிரமங்கள் இருக்கின்றன..
படைப்புக்களை தேன்கூட்டிற்கு நேரடியாக அனுப்பவேண்டும். இதற்காக ஒரு தனி பெயரில் ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கப்பட வேண்டும்)

Thursday, June 22, 2006

6

ஆறு விளையாட்டிற்கு இந்தப் புதியவனை அழைத்த நண்பர் நாகை சிவாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..... பதிவுலகில் எனக்கு பெரும் உதவி செய்த பொன்ஸ் மற்றும் Devக்கும் என் நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்..

இதோ எனது ஆறு உங்கள் பார்வைக்கு..

மறக்க முடியாதவை 6 :

1. குழந்தையுடன் வெளியில் வந்த செவிலி(நர்ஸ்), கை நீட்டிய யாரிடமும் கொடுக்காமல், என்னிடம் கொடுத்து உங்ககிட்ட தான் முதல்ல கொடுக்க வேண்டும் என்று குழந்தை பிறந்தவுடன் என் மனைவி கூறியதாக சொல்லிய அந்த வார்த்தைகளும், கண்ணீர் + பயத்துடன் வாங்கிய அந்த பிஞ்சு உடம்பின் முதல் ஸ்பரிசமும்..

2. பெண்ணை பார்த்து/பேசி விட்டு வெளியில் வந்ததும், அனைவருக்கும் பிடித்ததால், அடுத்த ஐந்தாவது நிமிடம் நான் கேட்டுக்கொண்ட படி என் தந்தை தொலைபேசியில் பெண்ணிடம் கேட்டு அவர் சொன்ன பதில் " எனக்கு 100% பிடிச்சு இருக்கு".

3. முதல் மாத சம்பளம்.

4. நண்பனுடன், சென்னை நெடுஞ்சாலையில் காற்றை கிழிக்கும் வேகத்தில் எதிர் வரும் லாரி ஓட்டுனரும், தாண்டிக் கொண்டு இருக்கும் பஸ் ஓட்டுனரும் கத்த அவர்களுக்கு நடுவில் ஒவர்டேக் செய்தது...

5. ஒன்பதாம் வகுப்பில், விடுதியில் சேர்ந்த ஒரு வாரத்தில் வீட்டு நினைப்பு வந்து யாருக்கும் தெரியாமல் நண்பன் உதவியுடன் தப்பித்து வீட்டுக்கு ஓடி வந்து உதை வாங்கியது..

6. இரவு நேரத்தில் ரஜினியை தனியாக பார்த்து ஒரு வார்த்தை பேசியது.

முடியாதவை 6:

1. சனி, ஞாயிறுகளில் எட்டரைக்கு முன் எழுவது + 1 மணிக்கு முன் குளிப்பது

2. படுத்தவுடன் தூங்குவது

3. அணாவசிய செலவுகளை தவிர்ப்பது.

4. எதையும் கடைசி நெரத்திற்கு தள்ளிப் போடாமல் ஆரம்பத்திலேயே செய்வது..

5. முடிந்து போன விஷயங்களில் இப்படி நடந்து இருக்க கூடதா என எண்ணாமல் இருப்பது.

6. பேப்பரில் விளையாட்டு/அரசியல் செய்திகளோடு மற்ற செய்திகளையும் படிப்பது..

தவறுகள் 6 :

1. 40000 ரூபாய்க்கு கிரசன்ட் கல்லூரியில் B.E கிடைத்தும் பணம் கொடுத்து படிக்க மாட்டேன் என்று வீராப்பு பேசியது..

2. கல்லூரி பேருந்தில் நான் சொன்ன ஒரு சாதாரன ஜொக்கிர்கு அசாதாரனமாய் சிரித்த பெண்ணை கவனிக்க ஆரம்பித்து கொஞ்ஜ நாளிலேயே "லவ் பன்றேன் இவளை" என்று பந்தாவுக்காக சொன்னது.

3. நாம் நினைப்பது தான் சரி என்ற எண்ணத்தில் வீட்டில் தந்தையுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போக கிளம்பியது..
4.
5.
6.
இடம் கொஞம் விட்டு வைப்போம், இனி செய்யப் போகும் தவறுகலுக்கு :-)

அடிக்கடி பார்ப்பவை 6 :

1.தேன்கூடு
2.தமிழ்மனம்
3.முத்து(தமிழினி)
4.குழலி
5.பொன்ஸ் பக்கங்கள்
6.நுனிப்புல்

பிடித்த பாடல்கள் 6 :

1.பூவே பூச்சூடவா
2.ஷென்பகமே.. ஷென்பகமே..
3.செந்தாழம்பூவில்..
4.பருவ நிலா.. நணைகிறதே
5.பில்லை நிலா
6.சுராங்கனி

அழைக்கும் ஆறுவர் :
1.இட்லிவடை : தேர்தல் சமயத்தில் செய்திகளை சூடாக பரிமாறியவர்..நகைச்சுவை பதிவுகளையும் அவ்வப்பொழுது நன்றாக கொடுப்பவர். நடுநிலைவாதியாக காட்டிக்கொன்டாலும் ஆ.தி.மு.க மேல் கொஞ்ஜம் பாசம் அதிகம் கொன்டவர் என்பது என் எண்ணம்.

2.துபாய்வாசி : பல நல்ல பதிவுகளுக்கு சொந்தக்காரர்..மனிதாபிமானமும், நகைச்சுவையும் கொண்டவர்...சொர்க்கத்துக்கு போரேன்னு சொல்லிகிட்டு இருக்கிறவர்..

3..லக்கிலுக் : காமிக்ஸ் பிரியர்...கலைஞர் அபிமானி.. ஒரு திராவிட தமிழர்.

4.நன்மனம் : பெயரை போலவே நல்ல உள்ளம் கொண்டவர்.. எனக்கு முதலில் சுரதாவை அறிமுகப்படுத்தியவர்(சரி..சரி..அவர திட்டதீங்க).. என் பதிவில் உள்ள எழுத்துப்பிழைகளை தனிமடலில் அன்பாக சுட்டிக் காட்டிய அன்பர்

5.syam : எதாவது எழுத ஆரம்பிங்க..அப்புரம் பாத்துக்கலாம் என்று என்னை எழுத தூண்டியவர்..சியாம் அன்னச்சி, 6 பதிவயாவது தமிழ்ல பொட்டுடுங்க..தங்கிலீஷ்ல வேணாம்..

6.கைப்புள்ள : நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல...

Wednesday, June 14, 2006

சூப்பர் ஸ்டாரை பார்த்த போது...

இது எனக்கு எற்பட்ட ஒரு அனுபவம்... இதுக்கெல்லாம் ஒரு பதிவா என்று சன்டைக்கு வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.(கொல்கிறேன்??):-)

ஒரு நாங்கைந்து வருடங்கள் முன்பு பொன்னியின் செல்வன் நாடகம் நந்தனத்தில் YMCA மைதானத்தில் நடக்கப் போகிறது என்று கேள்விப்பட்டேன்... அந்தக்க்கதையை தூக்கம் மறந்து படித்தவன் நான்..எனக்கு பல முறை படித்தும் அலுக்காத கதை அது...படிக்கும் போதே மனத்திரையில் காட்சிகள் ஓடும்.. அப்படிப்பட்ட கதையை, 5 பாகங்கள் கொண்ட நீண்ண்ண்ட கதையை எப்படி நாடகமாக காட்டப் போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் போயே தீருவது என்று முடிவு செய்தேன்.

சோதனையாக அந்த வீக் என்டில் திருப்பதியில் உள்ள ஒரு நண்பனின் வீட்டுக்கு போவது என என் நண்பர்கள் முடிவு எடுத்தார்கள்..சன்டே மதியம் கிளம்பி வந்து விட வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் நானும் கிளம்பினேன்..ஆனால் அவர்கள் சொன்னபடி செய்ய வில்லை..என் நண்பர்கள் அல்லவா?...நான் மட்டும் கிளம்பி வந்து விட்டேன்..

மாலை 5 அல்லது 6 மனி அளவில் அங்கு போய் செர்ந்தேன்..உள்ளே நுழையும் இடத்தில் நாசர் அவர்கள் நின்று இருந்தார்கள்... பரவாயில்லேயே.. நாசர் போன்ற சினிமா நட்சத்திரம் எல்லாம் வந்து இருக்கங்களே என்ற வியப்புடன் உள்ளே சென்றென்..சற்று நேரத்தில் ரேவதி அவர்களும் வந்தார்கள்.. இன்னும் கொஞ்ஜம் நேரம் கழித்து நான் மிகவும் வியந்து ரசிக்கும் கமல் அவர்கள் வந்தார்கள்...எனக்கு ஒன்றும் புரிய வில்லை.."அப்படி போடு" என்று தோன்றியது..சந்தோசமாக இருந்தது..

இன்னும் கொஞ்ஜ நெரம் சென்ற பின் பயங்கர விசில் சத்தம்.. வேற என்ன.....ஆமாம்..ஆமாம்.. அவரேதான்... தலைவர் சூப்பர் ஸ்டார் அவர்களும் அங்கு தன் மனைவி மற்றும் இன்னும் ஒருவரோடு( லதாவின் தம்பி ராகவேந்திரா என்று சொன்னார்கள்..உண்மையா என்று தெரியாது) வந்தார்...என் சந்தோசத்தை சொல்லவும் வேண்டுமா?..
ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால் இதுவரை பார்த்தது இல்லை.. பார்க்க செல்ல வேன்டும் என்று தோன்றியதும் இல்லை.. ஆனால் இப்போது பக்கத்தில் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் பொங்கியது...சிறிது நேரத்தில் நாடகம் தொடங்கியது.. நான் பிறகு அதில் மூழ்கி விட்டேன்..

மிகவும் அருமையாக அந்த நாடகத்தை வழங்கினார்கள்.. நாசர் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த "அதித்த கரிகாலன்" ஆக அருமையாக நடித்தார்கள்..முக்கியமான நிகழ்ச்சிகளை அருமையாக தேர்ந்து எடுத்து மற்றவைகளை இரண்டு கட்டியங்காவலர்கள் மூலம் சொல்லி முழுமை
படுத்தினார்கள்..திருப்தியாக 11.45 மணி அளவில் நாடகம் முடிந்தது... மறுபடியும் தலைவர் ஞாபகம் வந்தது.....

எப்படியாவது பக்கத்தில் பார்த்து விட வேண்டும் என்று வேகமாக கீழே இறங்கிணேன்..ஆனால் யாரையும் வெளியே விடாமல் ரஜினி மற்றும் மற்றவர்களை முதலில் வெளியே அனுமதித்தனர்.. இரண்டு அடி தொலைவில் ரஜினியை பார்த்தேன்..சிறிது நேரம் கழித்து மற்றவர்களை வெளியில் செல்ல அனுமதித்தனர்.. ரஜினியின் கார் பக்கத்திலேயே இருந்தது.. அம்பாஸ்சிடர்.. TMU 6009 என நினைக்கிறேன்... அவர்கள் ஏறிக்கொண்டு கண்ணாடியை எற்றி விட்டுக்கொண்டு கிளம்பினார்கள்..

நான் நம்பரை ஞாபகம் வைத்துக் கொண்டு வேக வேகமாக தூரத்தில் நிறுத்தி இருந்த என்னுடைய பைக்கை எடுக்க ஓடினேன்.. எடுப்பதற்க்குள் நிறைய நேரம் ஆகி விட்டது... சரி.. பரவாயில்லை..அதான் இவ்ளோ பக்கத்தில் பார்த்தோமே என்று நினைத்துக்கொண்டு வண்டியை எடுத்துக் கொன்டு வேகமாக (எப்போதும் போல்) சென்றேன்.. அப்போது சிறிது தூரத்தில் ஒரு அம்பாஸ்சிடர் ரைட் டர்ன் சிக்னல் போட்டுக்கொண்டு நிற்பது தெரிந்தது...

ஏதோ ஒரு நம்பிக்கையில் இன்னும் வேகமாக வண்டியை முறுக்கிக்கொண்டு சென்றேன்.. பக்கத்தில் நெருங்க நெருங்க அது சூப்பர் ஸ்டார் வண்டி என்பது உறுதியானது..வேகமாக வந்து பக்கத்தில் நிறுத்தினேன்.. அங்கு யாருமே இல்லை...வண்டி நின்ற சத்தம் கேட்டு முன்னே அமர்ந்து இருந்த ரஜினி திரும்பினார்...முகத்தில் ஒரு புன்னகையுடனே திரும்பினார்...இரவு நேரம் ஆதலால் கண்ணாடியை இறக்கி விட்டு இருப்பார் என நினைக்கிறேன்..

எனக்கு எதுவும் புரிய வில்லை.. என்ன பேசுவது என்றே தெரிய வில்லை.. "ஹல்லோ சார்.. எப்படி சார் இருக்கீங்க" என்றேன்..உற்சாகக் குரலில்... அவர் "நல்லா இருக்கேன்" என்றார் சிரித்துக்கொண்டே...எனக்கு வேறு எதுவும் தோன்ற வில்லை..."தேங்ஸ் சார்" என்றென். ஏன் அப்ப்டி சொன்னேன்??..ஒரு வேலை என்னிடம் பேசியதற்கு நன்றி சொல்லி இருப்பேன் என நினைக்கிறேன். அவரும் "சரி வருகிறேன்" என கூறிவிட்டு சென்று விட்டார்..

அது நடந்து ஒரு சில நிமிடத்திற்கு பிறகு தான் எல்லாம் தெளிவாக புரிந்தது... ஆகா.. எதாவது பேசி இருக்கலாமே?ஆட்டோகிராப் வாங்கி இருக்கலாமே..கை குலுக்கி இருக்கலாமே, என்று எத்தனையோ இருக்கலாமே தோன்றியது...என்ன செய்வது.. அவர் பக்கத்தில் இருந்த நேரத்தில் ஒன்றும் தோன்ற வில்லயே...அன்று நான் நொந்து கொண்டேனா இல்லை சந்தொஷப்பட்டேனா என தெரியாமல் ஏதொ ஒரு போதையுடன்(அந்த போதை இல்லீங்க) அறைக்கு வந்து சேர்ந்தேன்....

பி.கு : பதிவு எழுத வேண்டும் என்று ஆரம்பித்த பின் என்ன எழுதுவதென்று தோன்றவில்லை.. அப்போது தான் சூப்பர் ஸ்டாரை நேரில் பார்த்தும் பேசவேண்டும் என்று தோன்றாத இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.. வாழ்க்கை இப்படித்தான்.. நாம் ரொம்ப எதிர்பார்க்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது வார்த்தை வராமல் போய்விடுகிறது .

Wednesday, May 31, 2006

நள்ளிரவில்..

கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து நானும் என் நண்பனும் Bachelor's paradise எனப்படும் திருவல்லிக்கெனியில் ஒரு அறை எடுத்து தங்கி இருந்தோம்..அந்த விடுதியில்(Mansion) இடது பக்கத்தில் வரிசையாக அறைகள் இருக்கும்..வலது பக்கம் மாடி படி ஏறினால் 2 அறைகள் மட்டும் இருக்கும்..குளியல் அறை இணைப்பு கொன்டவை அவை....நாங்கள் அதில் ஒன்றை எடுத்து தங்கி இருந்தோம்.. அங்கே இரண்டு கட்டில்கள் இருக்கும்.. ஒரு கட்டிலுக்கு பின்னால் கதவுடன் கூடிய சிறிய பலகனி(Balcony) இருக்கும்..அந்த கதவை திறந்தால் இரவு நேரங்களில் கும்மிருட்டு தான் புலப்படும்..அந்த கட்டிலைத்தான் நான் உபயோகப்படுத்துவேன்...சிறிது இடைவெளி விட்டு அறைக்கு உள்பக்கதில் என் நண்பனின் கட்டில் இருக்கும்..பலகனிக்கு கீழே ஒரு சிறிய பாதை இருக்கும்...ஒரு பெரிய மரமும் எங்கள் அறைக்கு அருகாமையில் இருக்கும்...எப்போதும் அந்த கதவை திறந்து வைத்துக்கொண்டுதான் உறங்குவோம்.. அப்போது தான் கொஞ்சமாவது காற்று வரும்.வழக்கம் போல ஒரு நாள் தூங்கிக்கொண்டு இருந்தோம்.. அதிகாலை அல்லது நள்ளிரவு 3 மனி இருக்கும்...


அப்போது... திடீர் என்று என் நெஞ்சில் ஏதோ/யாரோ அழுத்துவது போல ஒரு உணர்வு எற்பட்டது.. "ஹா" என்ற கொஞ்சம் பெரிய சத்ததுடன் நான் எழுந்தேன்... அந்த சத்தம் கேட்டு முழித்த/பயந்த என் நண்பன் "அய்யோ அய்யோ" என்று பயங்கரமாக அலற ஆரம்பித்தான்..அதனால் மேலும் அரன்ட நான் அவனுடைய கட்டிலுக்கு தாவி அவன் வாயை பொத்தி "இரு இரு சத்தம் போடாதே" என்றேன் மெல்லமாக பயந்த குரலில்..அவனும் இன்னும் சற்று பயந்த குரலில் "என்ன ஆச்சு ஏன் கத்தின" என்று கேட்டான்..."என் நெஞ்சில் ஏதோ அழுத்தியது பொல இருந்தது" என்றேன்....அவன் அவசரமாக எழுந்து விளக்கை போட்டான்..என்னிடம் "முதலில் அந்த கதவை சாத்து" என்றான். நானும் வேகமாக கதவை சாத்தினேன்..கடிகாரத்தை பார்தோம்.. அது 3 AM என்றது,,, என்ன செய்வது என்று ஒரிரு வினாடிகள் யோசித்தோம்... உடனே அந்த அறையை விட்டு வெளியேருவது என்று முடிவு செய்தோம்...அவசர அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டு, ஒன்றாக சேர்ந்து கீழே இறங்கிச் சென்றோம். என்னுடைய வண்டியை எடுத்துக்கொன்டு மெரீனாவிற்க்கு விரைந்தோம். அங்கு இருந்த சிமென்ட் பென்ச்சில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தோம்.. விடிந்து வெளிச்சம் வந்த பின் அறைக்கு வருவது என்று முடிவு செய்தோம்..

பிறகு பேச ஆரம்பித்தொம்...அப்பொழுது அவன் நான் அலறிய சத்தம் கெட்டு எதுவோ பலகனியில் வந்து விட்டது என்று நினைத்து பயந்ததாக கூறினான்...எனக்கு என் வீட்டில் சிறு வயதில் ஒரிரவில் தூக்கம் வராமல் போர்வை வழியாக Zero watts பல்பை பார்த்துக்கொன்டு இருந்த பொழுது அறை வாசலில் மூன்று வேறு வேறு நிறத்தில் புடவை உடுத்திய பெண்கள் என்னைப்பார்த்து "வா.. வா.." என்று அழைத்தது... நான் பயந்து போனது,.. கனவா/உண்மையா/பிரமையா என்று தெரியாமல் நீண்ட நாட்கள் குழம்பியது... அதை சுத்தமாக மறந்தது எல்லாம் இப்பொது ஒட்டு மொத்தமாக ஞாபகத்துக்கு வந்தது...இன்னும் பிறர் சொல்லி நாங்கள் சிரித்த சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து இப்போது பயமுறுத்தப் பார்த்தது ..எப்படியோ காலை 5.30 மணி வரை அங்கே பல்லை கடித்து கொண்டு இருந்து விட்டு பிறகு அறைக்கு சென்றொம்...சென்று மெதுவாக கதவை திறந்து உள்ளே போனோம்..

வேறு ஒரு நண்பனிடம் நடந்தவற்றை கூறி அவனை அன்று துணைக்கு வரச்சொன்னோம்.. அவனும் இரவு வேளைகளில் இரண்டு நாட்கள் வந்தான்.. பிறகு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூடவே Gold flake Kings நிறைய வாங்கி வைத்துக்கொண்டு தனியாக உறங்க சென்றோம். புதிதாக நண்பன் வந்ததால் இழுத்து ஒன்றாய் போட்ட என் கட்டிலை இழுத்து தனியாக போட்டோம்.. பிறகு பேசிக்கொன்டே புகை பிடித்தபடியே அறையை நோட்டம் விட்டேன்.. என் பார்வை அடுத்த கட்டிலுக்கு அடியில் சென்றது... அங்கு..........


என் கட்டிலுக்கு மேல் மாட்டி வைத்து இருந்த காலண்டர் அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முன்று நாட்களுக்கு முந்திய தேதியுடன் புன்னகையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது ...


பி.கு : இது என் முதல் பதிவு.. வலைப்பதிவு நண்பர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்..அடங்குடா என்று சொன்னால் நத்தை போல சுருக்கிக்கொண்டு அவ்வப்பொது தலையை மட்டும் நீட்டி பின்னூட்டம் இடுவதோடு நிறுத்திக் கொள்வேன்.. பரவா இல்லை எழுது என்பீர்களேயனால்...சரி...சரி..நிப்பாட்டிக்கிறேன்....நீங்க இனி பேசுங்க...

இந்த சம்பவம் எனக்கு பொன்ஸ் அவர்களின் இந்த பதிவை படித்த பொழுது ஞாபகத்துக்கு வந்தது.. மெலும் பொன்ஸ் , நாமக்கல் சிபி , Syam அவர்களின் வாழ்த்தும் ஊக்கமும் எழுத தூன்டியது..அவர்களுக்கு என் நன்றிகள்...( குறைந்தது 3 பின்னூட்டமாவது கிடைக்கும்னு நினைக்கிறேன்.. பதில் சொல்லி 6 ஆக்கிடலாம் :-) ......பார்க்கலாம்..