ஆறு விளையாட்டிற்கு இந்தப் புதியவனை அழைத்த நண்பர் நாகை சிவாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..... பதிவுலகில் எனக்கு பெரும் உதவி செய்த பொன்ஸ் மற்றும் Devக்கும் என் நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்..
இதோ எனது ஆறு உங்கள் பார்வைக்கு..
மறக்க முடியாதவை 6 :
1. குழந்தையுடன் வெளியில் வந்த செவிலி(நர்ஸ்), கை நீட்டிய யாரிடமும் கொடுக்காமல், என்னிடம் கொடுத்து உங்ககிட்ட தான் முதல்ல கொடுக்க வேண்டும் என்று குழந்தை பிறந்தவுடன் என் மனைவி கூறியதாக சொல்லிய அந்த வார்த்தைகளும், கண்ணீர் + பயத்துடன் வாங்கிய அந்த பிஞ்சு உடம்பின் முதல் ஸ்பரிசமும்..
2. பெண்ணை பார்த்து/பேசி விட்டு வெளியில் வந்ததும், அனைவருக்கும் பிடித்ததால், அடுத்த ஐந்தாவது நிமிடம் நான் கேட்டுக்கொண்ட படி என் தந்தை தொலைபேசியில் பெண்ணிடம் கேட்டு அவர் சொன்ன பதில் " எனக்கு 100% பிடிச்சு இருக்கு".
3. முதல் மாத சம்பளம்.
4. நண்பனுடன், சென்னை நெடுஞ்சாலையில் காற்றை கிழிக்கும் வேகத்தில் எதிர் வரும் லாரி ஓட்டுனரும், தாண்டிக் கொண்டு இருக்கும் பஸ் ஓட்டுனரும் கத்த அவர்களுக்கு நடுவில் ஒவர்டேக் செய்தது...
5. ஒன்பதாம் வகுப்பில், விடுதியில் சேர்ந்த ஒரு வாரத்தில் வீட்டு நினைப்பு வந்து யாருக்கும் தெரியாமல் நண்பன் உதவியுடன் தப்பித்து வீட்டுக்கு ஓடி வந்து உதை வாங்கியது..
6. இரவு நேரத்தில் ரஜினியை தனியாக பார்த்து ஒரு வார்த்தை பேசியது.
முடியாதவை 6:
1. சனி, ஞாயிறுகளில் எட்டரைக்கு முன் எழுவது + 1 மணிக்கு முன் குளிப்பது
2. படுத்தவுடன் தூங்குவது
3. அணாவசிய செலவுகளை தவிர்ப்பது.
4. எதையும் கடைசி நெரத்திற்கு தள்ளிப் போடாமல் ஆரம்பத்திலேயே செய்வது..
5. முடிந்து போன விஷயங்களில் இப்படி நடந்து இருக்க கூடதா என எண்ணாமல் இருப்பது.
6. பேப்பரில் விளையாட்டு/அரசியல் செய்திகளோடு மற்ற செய்திகளையும் படிப்பது..
தவறுகள் 6 :
1. 40000 ரூபாய்க்கு கிரசன்ட் கல்லூரியில் B.E கிடைத்தும் பணம் கொடுத்து படிக்க மாட்டேன் என்று வீராப்பு பேசியது..
2. கல்லூரி பேருந்தில் நான் சொன்ன ஒரு சாதாரன ஜொக்கிர்கு அசாதாரனமாய் சிரித்த பெண்ணை கவனிக்க ஆரம்பித்து கொஞ்ஜ நாளிலேயே "லவ் பன்றேன் இவளை" என்று பந்தாவுக்காக சொன்னது.
3. நாம் நினைப்பது தான் சரி என்ற எண்ணத்தில் வீட்டில் தந்தையுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போக கிளம்பியது..
4.
5.
6.
இடம் கொஞம் விட்டு வைப்போம், இனி செய்யப் போகும் தவறுகலுக்கு :-)
அடிக்கடி பார்ப்பவை 6 :
1.தேன்கூடு
2.தமிழ்மனம்
3.முத்து(தமிழினி)
4.குழலி
5.பொன்ஸ் பக்கங்கள்
6.நுனிப்புல்
பிடித்த பாடல்கள் 6 :
1.பூவே பூச்சூடவா
2.ஷென்பகமே.. ஷென்பகமே..
3.செந்தாழம்பூவில்..
4.பருவ நிலா.. நணைகிறதே
5.பில்லை நிலா
6.சுராங்கனி
அழைக்கும் ஆறுவர் :
1.இட்லிவடை : தேர்தல் சமயத்தில் செய்திகளை சூடாக பரிமாறியவர்..நகைச்சுவை பதிவுகளையும் அவ்வப்பொழுது நன்றாக கொடுப்பவர். நடுநிலைவாதியாக காட்டிக்கொன்டாலும் ஆ.தி.மு.க மேல் கொஞ்ஜம் பாசம் அதிகம் கொன்டவர் என்பது என் எண்ணம்.
2.துபாய்வாசி : பல நல்ல பதிவுகளுக்கு சொந்தக்காரர்..மனிதாபிமானமும், நகைச்சுவையும் கொண்டவர்...சொர்க்கத்துக்கு போரேன்னு சொல்லிகிட்டு இருக்கிறவர்..
3..லக்கிலுக் : காமிக்ஸ் பிரியர்...கலைஞர் அபிமானி.. ஒரு திராவிட தமிழர்.
4.நன்மனம் : பெயரை போலவே நல்ல உள்ளம் கொண்டவர்.. எனக்கு முதலில் சுரதாவை அறிமுகப்படுத்தியவர்(சரி..சரி..அவர திட்டதீங்க).. என் பதிவில் உள்ள எழுத்துப்பிழைகளை தனிமடலில் அன்பாக சுட்டிக் காட்டிய அன்பர்
5.syam : எதாவது எழுத ஆரம்பிங்க..அப்புரம் பாத்துக்கலாம் என்று என்னை எழுத தூண்டியவர்..சியாம் அன்னச்சி, 6 பதிவயாவது தமிழ்ல பொட்டுடுங்க..தங்கிலீஷ்ல வேணாம்..
6.கைப்புள்ள : நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல...
Showing posts with label 6. Show all posts
Showing posts with label 6. Show all posts
Thursday, June 22, 2006
Subscribe to:
Posts (Atom)