Wednesday, May 31, 2006

நள்ளிரவில்..

கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து நானும் என் நண்பனும் Bachelor's paradise எனப்படும் திருவல்லிக்கெனியில் ஒரு அறை எடுத்து தங்கி இருந்தோம்..அந்த விடுதியில்(Mansion) இடது பக்கத்தில் வரிசையாக அறைகள் இருக்கும்..வலது பக்கம் மாடி படி ஏறினால் 2 அறைகள் மட்டும் இருக்கும்..குளியல் அறை இணைப்பு கொன்டவை அவை....நாங்கள் அதில் ஒன்றை எடுத்து தங்கி இருந்தோம்.. அங்கே இரண்டு கட்டில்கள் இருக்கும்.. ஒரு கட்டிலுக்கு பின்னால் கதவுடன் கூடிய சிறிய பலகனி(Balcony) இருக்கும்..அந்த கதவை திறந்தால் இரவு நேரங்களில் கும்மிருட்டு தான் புலப்படும்..அந்த கட்டிலைத்தான் நான் உபயோகப்படுத்துவேன்...சிறிது இடைவெளி விட்டு அறைக்கு உள்பக்கதில் என் நண்பனின் கட்டில் இருக்கும்..பலகனிக்கு கீழே ஒரு சிறிய பாதை இருக்கும்...ஒரு பெரிய மரமும் எங்கள் அறைக்கு அருகாமையில் இருக்கும்...எப்போதும் அந்த கதவை திறந்து வைத்துக்கொண்டுதான் உறங்குவோம்.. அப்போது தான் கொஞ்சமாவது காற்று வரும்.வழக்கம் போல ஒரு நாள் தூங்கிக்கொண்டு இருந்தோம்.. அதிகாலை அல்லது நள்ளிரவு 3 மனி இருக்கும்...


அப்போது... திடீர் என்று என் நெஞ்சில் ஏதோ/யாரோ அழுத்துவது போல ஒரு உணர்வு எற்பட்டது.. "ஹா" என்ற கொஞ்சம் பெரிய சத்ததுடன் நான் எழுந்தேன்... அந்த சத்தம் கேட்டு முழித்த/பயந்த என் நண்பன் "அய்யோ அய்யோ" என்று பயங்கரமாக அலற ஆரம்பித்தான்..அதனால் மேலும் அரன்ட நான் அவனுடைய கட்டிலுக்கு தாவி அவன் வாயை பொத்தி "இரு இரு சத்தம் போடாதே" என்றேன் மெல்லமாக பயந்த குரலில்..அவனும் இன்னும் சற்று பயந்த குரலில் "என்ன ஆச்சு ஏன் கத்தின" என்று கேட்டான்..."என் நெஞ்சில் ஏதோ அழுத்தியது பொல இருந்தது" என்றேன்....அவன் அவசரமாக எழுந்து விளக்கை போட்டான்..என்னிடம் "முதலில் அந்த கதவை சாத்து" என்றான். நானும் வேகமாக கதவை சாத்தினேன்..கடிகாரத்தை பார்தோம்.. அது 3 AM என்றது,,, என்ன செய்வது என்று ஒரிரு வினாடிகள் யோசித்தோம்... உடனே அந்த அறையை விட்டு வெளியேருவது என்று முடிவு செய்தோம்...அவசர அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டு, ஒன்றாக சேர்ந்து கீழே இறங்கிச் சென்றோம். என்னுடைய வண்டியை எடுத்துக்கொன்டு மெரீனாவிற்க்கு விரைந்தோம். அங்கு இருந்த சிமென்ட் பென்ச்சில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தோம்.. விடிந்து வெளிச்சம் வந்த பின் அறைக்கு வருவது என்று முடிவு செய்தோம்..

பிறகு பேச ஆரம்பித்தொம்...அப்பொழுது அவன் நான் அலறிய சத்தம் கெட்டு எதுவோ பலகனியில் வந்து விட்டது என்று நினைத்து பயந்ததாக கூறினான்...எனக்கு என் வீட்டில் சிறு வயதில் ஒரிரவில் தூக்கம் வராமல் போர்வை வழியாக Zero watts பல்பை பார்த்துக்கொன்டு இருந்த பொழுது அறை வாசலில் மூன்று வேறு வேறு நிறத்தில் புடவை உடுத்திய பெண்கள் என்னைப்பார்த்து "வா.. வா.." என்று அழைத்தது... நான் பயந்து போனது,.. கனவா/உண்மையா/பிரமையா என்று தெரியாமல் நீண்ட நாட்கள் குழம்பியது... அதை சுத்தமாக மறந்தது எல்லாம் இப்பொது ஒட்டு மொத்தமாக ஞாபகத்துக்கு வந்தது...இன்னும் பிறர் சொல்லி நாங்கள் சிரித்த சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து இப்போது பயமுறுத்தப் பார்த்தது ..எப்படியோ காலை 5.30 மணி வரை அங்கே பல்லை கடித்து கொண்டு இருந்து விட்டு பிறகு அறைக்கு சென்றொம்...சென்று மெதுவாக கதவை திறந்து உள்ளே போனோம்..

வேறு ஒரு நண்பனிடம் நடந்தவற்றை கூறி அவனை அன்று துணைக்கு வரச்சொன்னோம்.. அவனும் இரவு வேளைகளில் இரண்டு நாட்கள் வந்தான்.. பிறகு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூடவே Gold flake Kings நிறைய வாங்கி வைத்துக்கொண்டு தனியாக உறங்க சென்றோம். புதிதாக நண்பன் வந்ததால் இழுத்து ஒன்றாய் போட்ட என் கட்டிலை இழுத்து தனியாக போட்டோம்.. பிறகு பேசிக்கொன்டே புகை பிடித்தபடியே அறையை நோட்டம் விட்டேன்.. என் பார்வை அடுத்த கட்டிலுக்கு அடியில் சென்றது... அங்கு..........


என் கட்டிலுக்கு மேல் மாட்டி வைத்து இருந்த காலண்டர் அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முன்று நாட்களுக்கு முந்திய தேதியுடன் புன்னகையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது ...


பி.கு : இது என் முதல் பதிவு.. வலைப்பதிவு நண்பர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்..அடங்குடா என்று சொன்னால் நத்தை போல சுருக்கிக்கொண்டு அவ்வப்பொது தலையை மட்டும் நீட்டி பின்னூட்டம் இடுவதோடு நிறுத்திக் கொள்வேன்.. பரவா இல்லை எழுது என்பீர்களேயனால்...சரி...சரி..நிப்பாட்டிக்கிறேன்....நீங்க இனி பேசுங்க...

இந்த சம்பவம் எனக்கு பொன்ஸ் அவர்களின் இந்த பதிவை படித்த பொழுது ஞாபகத்துக்கு வந்தது.. மெலும் பொன்ஸ் , நாமக்கல் சிபி , Syam அவர்களின் வாழ்த்தும் ஊக்கமும் எழுத தூன்டியது..அவர்களுக்கு என் நன்றிகள்...( குறைந்தது 3 பின்னூட்டமாவது கிடைக்கும்னு நினைக்கிறேன்.. பதில் சொல்லி 6 ஆக்கிடலாம் :-) ......பார்க்கலாம்..