Monday, April 16, 2007

அச்சு கலக்கப் போவது நீங்களா?

என் பதிவை பார்த்ததுமே இருக்கும் ஆணியையெல்லாம் அம்போவென விட்டுவிட்டு வந்து ஆவலுடன் படித்துக்கொண்டிருக்கும் லட்சோப லட்ச வாசகர்களே...

இதோ உங்களுக்கு ஒரு சவால். கைப்பூ எனும் ஒரு மாவீரனை கூட்டமாக கூடி கும்மியடித்து அப்பு கொடுத்து அனுப்பி விட்ட வவாச எனும்
பதிவுலக வாசகர்களின் அங்கமாகிவிட்ட சங்கம் ஒரு போட்டி அறிவித்துள்ளது. என்னா போட்டின்னு பின்னாடி சொல்றேன்..


வக்கப்போர (வைக்கோல் போர்) பாத்துபுட்டு "போர் பல கண்டவன்"னு சொல்லிகிட்டு தளபதியாகிட்ட தேவும் ஆனை கட்டி போரடித்த பொண்ஸும் சேந்து இத ஆரம்பிச்சி ஒரு வருஷம் ஓடிடுச்சாம். சரி என்னாய்யா பண்ணியிருக்கங்கன்னு பாத்தா ஒன்னும் சொல்றாப்புல இல்ல..அணி சேராத அணிகள் மாதிரி கோஸ்டி சேராத அளுங்க நாங்கன்னு சொல்லியே ஒரு கோஸ்டிய சேத்துகிட்டு வரவன் போறவன் எல்லாரையும் சிரிக்க வச்சி அனுப்பி இருக்காங்க. மாசம் ஒருத்தன கூப்டு வச்சி கும்மராங்க..அத பாத்து சுத்தி இருக்கர எல்லாரும் மட்டுமில்ல அந்த பயபுள்ளயும் சேர்ந்தே சிரிக்குது.. சிரிச்சிக்கறது சிரிக்க வக்கிறது இத தவிர வேற ஒன்னும் உருப்படிய செய்யல..


சரி..அது என்னா போட்டி தெரியுமா?? பதிவெழுதி சிரிக்க வைக்க வைக்கிற போட்டியாம்...(நானெல்லாம் பதிவெழுதறதே ஒரு சிரிக்கிர விஷயம்தானேன்னு யாரும் முனுமுனுக்ககூடாது.) அதுக்கு பரிசு வேற கொடுக்கறாங்களாம்.. ஆனா என்ன? காசா கொடுத்தா குவார்ட்டர் அடிச்சிட்டு கவுந்துடுவோம்னு தெரிஞ்சி பொஸ்தகமா கொடுக்கறாங்க.. (ம்ம்.. படிக்கிற காலத்துலேயே நாங்க படிச்சதில்ல..இப்ப மட்டும் படிச்சிடுவோமா என்ன?)


போட்டி முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கு... இதுல எல்லாரும் கலந்துக்கனும்னு கேட்டுக்கறேன்..இவங்க நீங்க அனுப்பர காமடி பதிவுல எத எடுக்கறது..எத்க்கு பரிசு கொடுக்கறதுன்னு தெரியாம முழிக்கனும்.. திணரனும்.. சொல்லிபுட்டேன்... அந்த பதிவுகள படிச்சி எல்லாரும் சிரிக்கனும்.. சரியா?????


நெக்ஸ்ட் மீட் பன்னுவோம்.. வர்ட்டா?



மேலும் விபரங்களுக்கு :
http://vavaasangam.blogspot.com/2007/04/blog-post_6576.html
எழுத ஆரம்பிக்கும் முன் முக்கியமாக விதிமுறைகளைகளை படிக்கவும்.

இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் வவாசவுக்கு என் இனிய வாழ்த்துக்கள். மேலும் பல ஆண்டுகள் இந்த சங்கத்தின் சேவை தொடரவேண்டும் என விரும்புகிறேன்.அதற்கு வாசகர்களாகிய நாம் நம்முடைய ஆதரவை தொடர்ந்து வழங்குவோம் எனவும் நிச்சயமாக நம்புகிறேன்.


வவாச,
வாழ்க வளர்க.

11 comments:

ILA (a) இளா said...

மிக்க நன்றிங்க ஓசையாரே!

நாமக்கல் சிபி said...

மிக்க நன்றிங்க ஓசையாரே!

நாமக்கல் சிபி said...

//தளபதியாகிட்ட தேவும்//

ஆஹா! அப்போ என் போஸ்ட் அம்பேலா!

:))

நாமக்கல் சிபி said...

அப்ப போர்வாள் யாரு?

அந்த போஸ்ட் காலியா இருக்கா?

மனதின் ஓசை said...

//ஆஹா! அப்போ என் போஸ்ட் அம்பேலா!
//

சிபியண்ணே,
உங்க போஸ்ட பிடுங்கறதுக்கு நான் யாரு?

சின்ன பையன் தெரியாம தப்பு பன்னிட்டேன்.. மன்னிச்சிடுங்க.:-((((

இதனால் சகலமனவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்

"சிபியே சங்கத்தின் நிரந்தர தளபதி" :-))))))

தேவ் வெறும் போர்வால் மட்டுமே.

நாமக்கல் சிபி said...

//தேவ் வெறும் போர்வால் மட்டுமே//

அடப்பாவி!

ஏனய்யா எங்கள் இருவருக்குள்ளும் இப்படி புகைச்சலை உண்டு பண்ணுறீர்?

அவர் போர்வாள்!

(இது மட்டும் தேவ்க்கு தெரிஞ்சுது அவரு உம்ம மூக்குல வாலை ச்சே வாளை எடுத்து சொருகிடுவார்.)

மனதின் ஓசை said...

//இது மட்டும் தேவ்க்கு தெரிஞ்சுது அவரு உம்ம மூக்குல வாலை ச்சே வாளை எடுத்து சொருகிடுவார்//

சோ..தேவுகிட்ட வால் சே.. வாள் இருக்குன்னு சொல்றீங்க??

Unknown said...

ஆகா ஓசை செல்லம்.. ஏன் இப்படி கொல வெறி உனக்கு.. உனக்கு வால் தானே வேணும்.. ச்சே வாள் தானே வேணும்... வேணும்ன்னா நீயே வச்சுக்க.. நல்லா பத்திரமாப் பாத்துக்க.... அதுக்குன்னு தள கிட்டப் போய் என்னை மோத விட ஐடியா பண்ணுற... தள எவ்வளவு பெரிய ஆள்? அவர் பவர் என்ன? டவர் என்ன? தளபதி நாமக்கல் நாயகன்...கலாய்த்தல் கோமகன்.. பிதற்றல் பிதாமகன் சிபி வாழ்க..வாழ்க...

(யப்பா விட்டா கேப்புல்ல கிடாவாக்கி கழுத்தறுத்து ராவடி பண்ணிறுவாங்கப் போலிருக்கே)

நாகை சிவா said...

நீர் ஏன் முயற்சி செய்ய கூடாது?

மனதின் ஓசை said...

//ச்சே வாள் தானே வேணும்... வேணும்ன்னா நீயே வச்சுக்க.. நல்லா பத்திரமாப் பாத்துக்க///

தாங்க்ஸ் தேவு.. சிபிண்ணே.. நீங்க சொன்ன மாதிரியே தேவோட வால ஒட்ட நறுக்கி வாங்கியாச்சு..

மனதின் ஓசை said...

//நீர் ஏன் முயற்சி செய்ய கூடாது?//

புலி,

அடுத்தவங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கனும் இல்லயா? அதான்:-))))