Wednesday, June 28, 2006

தேன்கூடு போட்டி - சில யோசனைகள்

சமீபத்தில் அருமையான படைப்புக்களோடு தேன்கூடு போட்டி இனிதே நடந்து முடிந்தது..நல்ல படைப்புக்களை எழுத ஊக்குவிப்பதும், அதற்கு அங்கீகாரம் அளிப்பதும் இனிமையானவை.
அந்த போட்டியில் வாக்களிக்கும்பொழுது எனக்கு தோன்றிய சில யோசனைகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யோசனை 1:

ஒருவர் அதிக பட்சம் 3 படைப்புகளுக்கு மட்டுமே வாக்கு அளிக்கலாம்.. தன்னுடைய விருப்ப வரிசையையும் (1,2,3) தெரிவிக்க வேண்டும்..
தேன்கூடு அமைப்பளர்கள் ஒவ்வொருவருடைய முதல் விருப்ப பதிவிற்கு 3 புள்ளிகளும், இரன்டாம் விருப்ப பதிவிற்கு 2 புள்ளிகளும், மூன்றாம் விருப்ப பதிவிற்கு 1 புள்ளிகளும் வழங்க வேண்டும்.

வாக்கெடுப்பு முடிந்த பின் மொத்ததில் அதிக புள்ளிகளை பிடித்த 3 பதிவுகளை அந்த வரிசைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.
-------------------------
யோசனை 2:

ஒவ்வொரு வாசகருக்கும் மொத்தம் 10 புள்ளிகள் அளிக்கலாம்.. அவர்கள் அதனை அவர்களுடைய விருப்பப்படி எத்தனை படைப்புகளுக்கு வேண்டுமனாலும் பகிர்ந்து அளிக்கலாம்..

வாக்கெடுப்பு முடிந்த பின் மொத்ததில் அதிக புள்ளிகளை பிடித்த 3 பதிவுகளை அந்த வரிசைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.
-------------------------
யோசனை 3:

ஒவ்வொரு படைப்பிற்கும் வாசகர்கள் 1 முதல் 10 வரையில் புள்ளிகள் அளிக்கலாம்..

வாக்கெடுப்பு முடிந்த பின் மொத்ததில் அதிக புள்ளிகளை பிடித்த 3 பதிவுகளை அந்த வரிசைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.
-------------------------

மேலும் வாக்களிப்பு முறையை தெளிவாக வாக்கு அளிக்கும் இடத்தில் வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டும்..

இதை படிக்கும் அனைவரும் (தேன்கூடு அமைப்பளர்கள்/ வாக்களர்கள்/ படைப்பாளிகள்) இதை பற்றிய கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கெட்டுக் கொள்கிறேன்.

பி.கு : எனக்கு பிடித்த வலைதளமான தேன்கூட்டிற்கு எதுவும் சிறு பங்களிப்பு செய்ய முடியுமா என்ற நோக்கில்தான் இந்த பதிவை எழுதினேன்..குற்றமோ, குறையோ சொல்ல அல்ல.. இதை படிக்கும் வாசகர்கள்/தேன்கூடு அமைப்பளர்கள் அதனை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.. யாருக்கும் எதுவும் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கவும்.. உடனே இந்த பதிவு நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


வாசகர்களிடம் இருந்து வந்த யோசனைகள்

1. எழுதுபவரின் பெயரை தெரியப்படுத்தக்கூடாது.
(இதில் சில சிரமங்கள் இருக்கின்றன..
படைப்புக்களை தேன்கூட்டிற்கு நேரடியாக அனுப்பவேண்டும். இதற்காக ஒரு தனி பெயரில் ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கப்பட வேண்டும்)

Thursday, June 22, 2006

6

ஆறு விளையாட்டிற்கு இந்தப் புதியவனை அழைத்த நண்பர் நாகை சிவாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..... பதிவுலகில் எனக்கு பெரும் உதவி செய்த பொன்ஸ் மற்றும் Devக்கும் என் நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்..

இதோ எனது ஆறு உங்கள் பார்வைக்கு..

மறக்க முடியாதவை 6 :

1. குழந்தையுடன் வெளியில் வந்த செவிலி(நர்ஸ்), கை நீட்டிய யாரிடமும் கொடுக்காமல், என்னிடம் கொடுத்து உங்ககிட்ட தான் முதல்ல கொடுக்க வேண்டும் என்று குழந்தை பிறந்தவுடன் என் மனைவி கூறியதாக சொல்லிய அந்த வார்த்தைகளும், கண்ணீர் + பயத்துடன் வாங்கிய அந்த பிஞ்சு உடம்பின் முதல் ஸ்பரிசமும்..

2. பெண்ணை பார்த்து/பேசி விட்டு வெளியில் வந்ததும், அனைவருக்கும் பிடித்ததால், அடுத்த ஐந்தாவது நிமிடம் நான் கேட்டுக்கொண்ட படி என் தந்தை தொலைபேசியில் பெண்ணிடம் கேட்டு அவர் சொன்ன பதில் " எனக்கு 100% பிடிச்சு இருக்கு".

3. முதல் மாத சம்பளம்.

4. நண்பனுடன், சென்னை நெடுஞ்சாலையில் காற்றை கிழிக்கும் வேகத்தில் எதிர் வரும் லாரி ஓட்டுனரும், தாண்டிக் கொண்டு இருக்கும் பஸ் ஓட்டுனரும் கத்த அவர்களுக்கு நடுவில் ஒவர்டேக் செய்தது...

5. ஒன்பதாம் வகுப்பில், விடுதியில் சேர்ந்த ஒரு வாரத்தில் வீட்டு நினைப்பு வந்து யாருக்கும் தெரியாமல் நண்பன் உதவியுடன் தப்பித்து வீட்டுக்கு ஓடி வந்து உதை வாங்கியது..

6. இரவு நேரத்தில் ரஜினியை தனியாக பார்த்து ஒரு வார்த்தை பேசியது.

முடியாதவை 6:

1. சனி, ஞாயிறுகளில் எட்டரைக்கு முன் எழுவது + 1 மணிக்கு முன் குளிப்பது

2. படுத்தவுடன் தூங்குவது

3. அணாவசிய செலவுகளை தவிர்ப்பது.

4. எதையும் கடைசி நெரத்திற்கு தள்ளிப் போடாமல் ஆரம்பத்திலேயே செய்வது..

5. முடிந்து போன விஷயங்களில் இப்படி நடந்து இருக்க கூடதா என எண்ணாமல் இருப்பது.

6. பேப்பரில் விளையாட்டு/அரசியல் செய்திகளோடு மற்ற செய்திகளையும் படிப்பது..

தவறுகள் 6 :

1. 40000 ரூபாய்க்கு கிரசன்ட் கல்லூரியில் B.E கிடைத்தும் பணம் கொடுத்து படிக்க மாட்டேன் என்று வீராப்பு பேசியது..

2. கல்லூரி பேருந்தில் நான் சொன்ன ஒரு சாதாரன ஜொக்கிர்கு அசாதாரனமாய் சிரித்த பெண்ணை கவனிக்க ஆரம்பித்து கொஞ்ஜ நாளிலேயே "லவ் பன்றேன் இவளை" என்று பந்தாவுக்காக சொன்னது.

3. நாம் நினைப்பது தான் சரி என்ற எண்ணத்தில் வீட்டில் தந்தையுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போக கிளம்பியது..
4.
5.
6.
இடம் கொஞம் விட்டு வைப்போம், இனி செய்யப் போகும் தவறுகலுக்கு :-)

அடிக்கடி பார்ப்பவை 6 :

1.தேன்கூடு
2.தமிழ்மனம்
3.முத்து(தமிழினி)
4.குழலி
5.பொன்ஸ் பக்கங்கள்
6.நுனிப்புல்

பிடித்த பாடல்கள் 6 :

1.பூவே பூச்சூடவா
2.ஷென்பகமே.. ஷென்பகமே..
3.செந்தாழம்பூவில்..
4.பருவ நிலா.. நணைகிறதே
5.பில்லை நிலா
6.சுராங்கனி

அழைக்கும் ஆறுவர் :
1.இட்லிவடை : தேர்தல் சமயத்தில் செய்திகளை சூடாக பரிமாறியவர்..நகைச்சுவை பதிவுகளையும் அவ்வப்பொழுது நன்றாக கொடுப்பவர். நடுநிலைவாதியாக காட்டிக்கொன்டாலும் ஆ.தி.மு.க மேல் கொஞ்ஜம் பாசம் அதிகம் கொன்டவர் என்பது என் எண்ணம்.

2.துபாய்வாசி : பல நல்ல பதிவுகளுக்கு சொந்தக்காரர்..மனிதாபிமானமும், நகைச்சுவையும் கொண்டவர்...சொர்க்கத்துக்கு போரேன்னு சொல்லிகிட்டு இருக்கிறவர்..

3..லக்கிலுக் : காமிக்ஸ் பிரியர்...கலைஞர் அபிமானி.. ஒரு திராவிட தமிழர்.

4.நன்மனம் : பெயரை போலவே நல்ல உள்ளம் கொண்டவர்.. எனக்கு முதலில் சுரதாவை அறிமுகப்படுத்தியவர்(சரி..சரி..அவர திட்டதீங்க).. என் பதிவில் உள்ள எழுத்துப்பிழைகளை தனிமடலில் அன்பாக சுட்டிக் காட்டிய அன்பர்

5.syam : எதாவது எழுத ஆரம்பிங்க..அப்புரம் பாத்துக்கலாம் என்று என்னை எழுத தூண்டியவர்..சியாம் அன்னச்சி, 6 பதிவயாவது தமிழ்ல பொட்டுடுங்க..தங்கிலீஷ்ல வேணாம்..

6.கைப்புள்ள : நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல...

Wednesday, June 14, 2006

சூப்பர் ஸ்டாரை பார்த்த போது...

இது எனக்கு எற்பட்ட ஒரு அனுபவம்... இதுக்கெல்லாம் ஒரு பதிவா என்று சன்டைக்கு வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.(கொல்கிறேன்??):-)

ஒரு நாங்கைந்து வருடங்கள் முன்பு பொன்னியின் செல்வன் நாடகம் நந்தனத்தில் YMCA மைதானத்தில் நடக்கப் போகிறது என்று கேள்விப்பட்டேன்... அந்தக்க்கதையை தூக்கம் மறந்து படித்தவன் நான்..எனக்கு பல முறை படித்தும் அலுக்காத கதை அது...படிக்கும் போதே மனத்திரையில் காட்சிகள் ஓடும்.. அப்படிப்பட்ட கதையை, 5 பாகங்கள் கொண்ட நீண்ண்ண்ட கதையை எப்படி நாடகமாக காட்டப் போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் போயே தீருவது என்று முடிவு செய்தேன்.

சோதனையாக அந்த வீக் என்டில் திருப்பதியில் உள்ள ஒரு நண்பனின் வீட்டுக்கு போவது என என் நண்பர்கள் முடிவு எடுத்தார்கள்..சன்டே மதியம் கிளம்பி வந்து விட வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் நானும் கிளம்பினேன்..ஆனால் அவர்கள் சொன்னபடி செய்ய வில்லை..என் நண்பர்கள் அல்லவா?...நான் மட்டும் கிளம்பி வந்து விட்டேன்..

மாலை 5 அல்லது 6 மனி அளவில் அங்கு போய் செர்ந்தேன்..உள்ளே நுழையும் இடத்தில் நாசர் அவர்கள் நின்று இருந்தார்கள்... பரவாயில்லேயே.. நாசர் போன்ற சினிமா நட்சத்திரம் எல்லாம் வந்து இருக்கங்களே என்ற வியப்புடன் உள்ளே சென்றென்..சற்று நேரத்தில் ரேவதி அவர்களும் வந்தார்கள்.. இன்னும் கொஞ்ஜம் நேரம் கழித்து நான் மிகவும் வியந்து ரசிக்கும் கமல் அவர்கள் வந்தார்கள்...எனக்கு ஒன்றும் புரிய வில்லை.."அப்படி போடு" என்று தோன்றியது..சந்தோசமாக இருந்தது..

இன்னும் கொஞ்ஜ நெரம் சென்ற பின் பயங்கர விசில் சத்தம்.. வேற என்ன.....ஆமாம்..ஆமாம்.. அவரேதான்... தலைவர் சூப்பர் ஸ்டார் அவர்களும் அங்கு தன் மனைவி மற்றும் இன்னும் ஒருவரோடு( லதாவின் தம்பி ராகவேந்திரா என்று சொன்னார்கள்..உண்மையா என்று தெரியாது) வந்தார்...என் சந்தோசத்தை சொல்லவும் வேண்டுமா?..
ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால் இதுவரை பார்த்தது இல்லை.. பார்க்க செல்ல வேன்டும் என்று தோன்றியதும் இல்லை.. ஆனால் இப்போது பக்கத்தில் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் பொங்கியது...சிறிது நேரத்தில் நாடகம் தொடங்கியது.. நான் பிறகு அதில் மூழ்கி விட்டேன்..

மிகவும் அருமையாக அந்த நாடகத்தை வழங்கினார்கள்.. நாசர் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த "அதித்த கரிகாலன்" ஆக அருமையாக நடித்தார்கள்..முக்கியமான நிகழ்ச்சிகளை அருமையாக தேர்ந்து எடுத்து மற்றவைகளை இரண்டு கட்டியங்காவலர்கள் மூலம் சொல்லி முழுமை
படுத்தினார்கள்..திருப்தியாக 11.45 மணி அளவில் நாடகம் முடிந்தது... மறுபடியும் தலைவர் ஞாபகம் வந்தது.....

எப்படியாவது பக்கத்தில் பார்த்து விட வேண்டும் என்று வேகமாக கீழே இறங்கிணேன்..ஆனால் யாரையும் வெளியே விடாமல் ரஜினி மற்றும் மற்றவர்களை முதலில் வெளியே அனுமதித்தனர்.. இரண்டு அடி தொலைவில் ரஜினியை பார்த்தேன்..சிறிது நேரம் கழித்து மற்றவர்களை வெளியில் செல்ல அனுமதித்தனர்.. ரஜினியின் கார் பக்கத்திலேயே இருந்தது.. அம்பாஸ்சிடர்.. TMU 6009 என நினைக்கிறேன்... அவர்கள் ஏறிக்கொண்டு கண்ணாடியை எற்றி விட்டுக்கொண்டு கிளம்பினார்கள்..

நான் நம்பரை ஞாபகம் வைத்துக் கொண்டு வேக வேகமாக தூரத்தில் நிறுத்தி இருந்த என்னுடைய பைக்கை எடுக்க ஓடினேன்.. எடுப்பதற்க்குள் நிறைய நேரம் ஆகி விட்டது... சரி.. பரவாயில்லை..அதான் இவ்ளோ பக்கத்தில் பார்த்தோமே என்று நினைத்துக்கொண்டு வண்டியை எடுத்துக் கொன்டு வேகமாக (எப்போதும் போல்) சென்றேன்.. அப்போது சிறிது தூரத்தில் ஒரு அம்பாஸ்சிடர் ரைட் டர்ன் சிக்னல் போட்டுக்கொண்டு நிற்பது தெரிந்தது...

ஏதோ ஒரு நம்பிக்கையில் இன்னும் வேகமாக வண்டியை முறுக்கிக்கொண்டு சென்றேன்.. பக்கத்தில் நெருங்க நெருங்க அது சூப்பர் ஸ்டார் வண்டி என்பது உறுதியானது..வேகமாக வந்து பக்கத்தில் நிறுத்தினேன்.. அங்கு யாருமே இல்லை...வண்டி நின்ற சத்தம் கேட்டு முன்னே அமர்ந்து இருந்த ரஜினி திரும்பினார்...முகத்தில் ஒரு புன்னகையுடனே திரும்பினார்...இரவு நேரம் ஆதலால் கண்ணாடியை இறக்கி விட்டு இருப்பார் என நினைக்கிறேன்..

எனக்கு எதுவும் புரிய வில்லை.. என்ன பேசுவது என்றே தெரிய வில்லை.. "ஹல்லோ சார்.. எப்படி சார் இருக்கீங்க" என்றேன்..உற்சாகக் குரலில்... அவர் "நல்லா இருக்கேன்" என்றார் சிரித்துக்கொண்டே...எனக்கு வேறு எதுவும் தோன்ற வில்லை..."தேங்ஸ் சார்" என்றென். ஏன் அப்ப்டி சொன்னேன்??..ஒரு வேலை என்னிடம் பேசியதற்கு நன்றி சொல்லி இருப்பேன் என நினைக்கிறேன். அவரும் "சரி வருகிறேன்" என கூறிவிட்டு சென்று விட்டார்..

அது நடந்து ஒரு சில நிமிடத்திற்கு பிறகு தான் எல்லாம் தெளிவாக புரிந்தது... ஆகா.. எதாவது பேசி இருக்கலாமே?ஆட்டோகிராப் வாங்கி இருக்கலாமே..கை குலுக்கி இருக்கலாமே, என்று எத்தனையோ இருக்கலாமே தோன்றியது...என்ன செய்வது.. அவர் பக்கத்தில் இருந்த நேரத்தில் ஒன்றும் தோன்ற வில்லயே...அன்று நான் நொந்து கொண்டேனா இல்லை சந்தொஷப்பட்டேனா என தெரியாமல் ஏதொ ஒரு போதையுடன்(அந்த போதை இல்லீங்க) அறைக்கு வந்து சேர்ந்தேன்....

பி.கு : பதிவு எழுத வேண்டும் என்று ஆரம்பித்த பின் என்ன எழுதுவதென்று தோன்றவில்லை.. அப்போது தான் சூப்பர் ஸ்டாரை நேரில் பார்த்தும் பேசவேண்டும் என்று தோன்றாத இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.. வாழ்க்கை இப்படித்தான்.. நாம் ரொம்ப எதிர்பார்க்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது வார்த்தை வராமல் போய்விடுகிறது .