Thursday, September 28, 2006

ஏமாத்திபுட்டீங்களே... திருமா தம்பி.

என்ன கொடுமை சார் இது?

கட்சிய உடைக்கறது, கடைசி நேரம் வரை வரை கூட்ட்ணியில இருக்க வச்சி அப்புரம் அணி மாற வைக்கறது, MLA க்களை அணி மாற வச்சி அறிக்கை விட வைக்கிறது,நடிகர்களை தன் பக்கம் இருப்பது போல் காட்டிக்கொள்வது..இது எல்லாத்தையும் வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்கறாங்களே..நியாயமா? அடுக்குமா?

அம்மா அந்த மாதிரி பன்னத ராஜதந்திரம் னு சொல்லிகிட்டு இருந்தோமே... அது எல்லாம் அம்மாவாலதான் முடியும்னு வேற வாய்சவடால் விட்டுகிட்டு இருந்தோமே.. கொடுத்த அல்வாவ முந்திரி, திராட்சையோட சேத்து இப்போ திருப்பி கொடுக்கறாங்களே.. இப்பொ எல்லாம் போச்சே...என்ன் பன்றதுன்னு புரியலியே...கண்ண வேற கட்டுதே..அய்யோ...அம்மா...