Monday, July 24, 2006

பிரின்ஸ்/பிரியதர்ஷினி

இந்த வார இறுதியில் பார்த்த செய்திகளில் பாதித்தவை இரண்டு...

1. 5 வயது சிறுவன் 50 மணி நேர போரட்டத்திற்கு பின் தவறி விழுந்து இருந்த குழியில் இருந்து மீட்கப்பட்டான்..ஒரு பிஞ்சு உயிர் காப்பற்றப்பட்டது...மீட்டவர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...இது தோல்வியில் முடிந்து விடுமோ என பயந்து கொண்டு இருந்தேன்...(இது போன்ற சில சம்பவங்கள் இதற்கு முன் தோல்வியில் முடிந்து கண்டு மணம் நொந்து இருந்தேன்).

அதே நேரம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? உயிரின் மதிப்பு அது போகும்போதுதான் கவனிக்கப்படுமா? இன்னும் எத்தனையோ பேர் இருந்து கொண்டே சாகிறார்கள்... இருக்கும் பொழுதே கவனிக்கலாமே... "மரணம் மட்டுமா மரணம்" என்ற லிவிங் ஸ்மைல் வித்யா வின் கவிதை நினைவுக்கு வருகிறது..கூடவே ஒரு சில அலுவலகங்கள் இருக்கும்பொழுது தேவைகளை கவனிக்கமல், வேலையை விட்டு போகிறேன் என சொன்னதும் onsite வாய்ப்பு கொடுப்பதும், சம்பளம் அதிகம் ஆக்கி கொடுப்பதும் ஞாபகத்துக்கு வருகிறது..

2. பிரியதர்ஷினி என்பவர் 12 ஆண்டுகளுக்கு முன் கற்பழித்து கொலை செய்யப்படுள்ளார்..அந்த வழக்கில் நீதிபதி இவன்தான் குற்றம் செய்தவன் என தெரிந்தும் சாட்சி சரியாக இல்லாததால் விடுதலை செய்வதாக அறிவித்து இருக்கிறார்கள். கொலை.. கற்பழிப்பு- இரண்டும் எவ்வளவு பெரிய குற்றங்கள்/பாவங்கள்?..இதனை செய்தவன் இப்பொழுது சட்டப்படிப்பு படித்து வருகிறான்.....பாவப்பட்ட அந்தப்பெண்ணின் 70 வயது தந்தை நியாயத்துக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்.

தப்பை சாட்சி இல்லாமல் செய்தால் தவறில்லையா? தண்டனை இல்லையா? இது ஒரு தவறான முன்னுதாரனமாக ஆகிவிடாதா?

கூடவே இவந்தான் தவறு செய்தது என எப்படி நீதிபதிக்கு சாட்சிகள் இல்லாமலும் எப்படி தெரிந்தது?...அப்பட்டமாக 100% தெரிந்தால் அதன் அடிப்படையில் தன்டனை கொடுக்க சட்டம் வழி செய்யுமா? அப்படி செய்தால் அது தவறாக பயன்படுத்தப்படுமே என்ற ஆதங்கமும் எழுகிறது.. என்னதான் இதற்கு தீர்வு?