Wednesday, June 18, 2008

பாமாக- திமுக-ஆதிமுக-காங்கிரஸ்

ராமதாஸ் : பார்த்தீங்களா..பார்த்தீங்களா.
ஜெயா : கேட்டீங்களா..கேட்டீங்களா
மு.க : (2-3 மாதம் கழித்து) : வாங்கிட்டீங்களா..வாங்கிட்டீங்களா
_____________________________

திமுக - பாமாக முறிவு நீண்ட நாட்களாக எதிர்பார்த்ததுதான். வெளியேறுவார்களா/வெளியேற்றப்படுவார்களா என்பதற்கு மட்டும் முடிவு தெரிந்துவிட்டது.

பாமாகவுக்கு ஆதிமுக(கூடவே பாஜாக)வுடன் கூட்டு சேர ஆசைப்பட்ட எதிர்பார்த்த சந்தர்ப்பம். மத்தியில் பாஜாக தான் அடுத்து வரும் போல் தெரிகிறது.பாமாக ஜெயிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள ஆசசப்படும் என்பது தெரிந்ததுதான்.

இது திமுகாவுக்கு நிச்சயம் பலவீணம்தான். அவர்களின் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. (கனிமொழி/ஸ்டாலின் - அழகிரி /அழகிரி மகள்/ராயல் கேபிள் விஷன்) - குடும்ப அரசியல் விவாதம் மறுபடியும் ஆரம்பிக்கும். இதற்கு திமுகாவிடம் சரியான பதில்கள் இருப்பதாக தெரியவில்லை.

இப்போது காங்கிரஸுக்கு செல்வாக்கு அதிகம். அது அவர்களின் பல கோஷ்டிகளை எப்படி யோசிக்கவைக்கும்/பேசவைக்கும் என்பது கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும். மொத்தத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

ஆதிமுக, அதாவது ஜெயலலிதா அமைதியாக ஆணவம் இல்லாமல் இருந்தாலே அடுத்த ஆட்சியை பிடித்து விடலாம். இருப்பாரா?

மதிமுக : ?

Tuesday, June 17, 2008

தசாவதாரம் - பத்தே பத்து வரி.

தமிழ்மண விமர்சனங்களுக்கு நன்றி - இடைவேளையில் திருப்தியாகவே உணர்ந்தேன் :-)

முதல் பத்து நிமிடங்கள் அருமை.(கொடுத்த காசு அதற்கே சரியென்றாலும் தொடர்ந்து பார்த்தது ஆட்டோவின் அநியாய மீட்டருக்கு சரியானது. )அமெரிக்காவில் நடக்கும் காட்சிகளும் நன்றாகவே எடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் பாதியில் லாஜிக் ரோம்பவே இடிக்கிறது. விறுவிறுப்பும் குறைவு. அசின் - கடுப்பேற்றுகிறார். என்னடா லாஜிக் இது என்ற யோசனைக்கு வித்திடுகிறார். அது படம் முடியும்வரை தொட்ர்கிறது.

அனாவசிய செலவுகளாக எதுவும் தெரியவில்லை. தொழில்நுட்பம்/கேமரா அருமை.

கடவுள் இல்லை என சொல்லுகிறார்..ஆனால் அந்த பண்ணிரண்டாம் நூற்றாண்டு முடிச்சு உட்பட அனைத்தும் கடவுள் இருப்பதை உறுதி செய்வதாகவே உள்ளது.

கமலின் உழைப்பு, அதை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒவ்வொறு பாத்திரத்தின் வசன உச்சரிப்பு/பாடி லாங்குவேஜ் வித்தியாசம் அருமை. hats off Kamal.

பாதி பாத்திரங்களின் மேக்கப் mask போட்டு விட்டது போலவெ இருந்தது.

fletcher-ஐ எனக்கு பிடித்தே இருந்தது. நன்றாகவே இருந்தது அந்த கதாபத்திரம். கூடவே பல்ராம் நாய்டு(மேக்கப் அருமை) & பூவராகவன். வழக்கமான கமல் சராசரிதான். ஒன்றும் புதிதாகவோ பாரட்டும்படியோ இல்லை

கலிபுல்லா,அவ்டார் சிங்(+ magic bullt) தேவையே இல்லாதவை (அசினும்தான்). புஷ் பாத்திரம் தமாஷ். அதைவிட பெரிய தமாஷ் இதை புஷ் பார்க்கப்போவதாக புரளிவிட்டது. தோற்றம் ஓரளவு புஷ் போலவே இருந்தது.

தாராளமாக பார்க்கலாம். (கண்டிப்பாக தியேட்டரில் மட்டுமே) பார்க்க வேண்டிய படம்.

Monday, June 18, 2007

அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்கவேண்டும் - ஜெயலலிதா திடீர் கோரிக்கை

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் அப்துல் கலாமையே நிறுத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான மூன்றாவது அணி கோரிக்கை விடுத்துள்ளது. அவரை சந்தித்து போட்டியிடுமாறு கோரப் போவதாகவும், அவரையே ஆதரிக்கப் போவதாகவும் இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது. இன்று ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த 3வது அணியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக் கூட்டத்தில் ஜெயலலிதா தவிர, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்திய தேசிய லோக்தள் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா, ஜார்க்கண்ட் மோச்சா தலைவர் பாபுலால் மராண்டி, அஸ்ஸாம் கன பரிஷத் தலைவர் பிரிந்தாபன் கோஸ்வாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தில் 3வது அணிக்கு புதிய பெயரும் சூட்டப்பட்டது. இனிமேல் இந்தக் கூட்டணி ஐக்கிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று அழைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகும். இந்தப் பெயரை சூட்டியவர் முதல்வர் கருணாநிதி. இப்போது கிட்டத்தட்ட அதே பெயரில் ஜனநாயகத்தையும் சேர்த்து தனது அணிக்கு பெயர் சூட்டியுள்ளார் ஜெயலலிதா. பாத்திமா பீவி.... முன்னதாக மூன்றாவது அணியின் சார்பில், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அல்லது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் தமிழக ஆளுநருமான பாத்திமா பீபி ஆகியோரில் ஒருவரை நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. டான்சி வழக்கில் ஜெயலலிதா மீது நீதிமன்றமே குற்றம் சாட்டிய நிலையிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஏதோ காரணத்துக்காக, ஜெயலலிதாவையே முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் பாத்திமா பீவி என்பது நினைவிருக்கலாம். கேரளத்தைச் சேர்ந்த பாத்திமா பீவிக்கு வேண்டப்பட்ட மலையாள நிதி நிறுவன அதிபரை மிரட்டியதால் தான் வெங்கடேச பண்ணையாரை எண்கவுண்டரில் போட்டுத் தள்ளியது அதிமுக அரசு என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டதும் நினைவுகூறத்தக்கது. ஆனால், பாத்திமா பீவிக்கு பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. அதே போல பரூக் அப்துப்லாவுக்கும் கூட்டணியில் பெரும்பாலானவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து பெண் வேட்பாளரை நிறுத்தி தங்களுக்கு செக் வைத்த காங்கிரசுக்கு பதிலடி தரும் வகையில் அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தக் கோருவது என முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம் தேசிய அளவில் தங்களது கூட்டணிக்கு புதிய மரியாதை கிடைக்கும் என ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது. ஆனால், கலாம் அதை ஏற்காவிட்டால் இந்தக் கூட்டணி யாரை ஆதரிக்கும் என்று தெரியலில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன், சுயேச்சையாக துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் போட்டியிடவுள்ளார். ஆனால், எக்காரணம் கொண்டும் அவரை ஆதரிப்பதில்லை என மூன்றாவது அணியின் முக்கிய கட்சியான முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி முடிவு செய்துள்ளது. அக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களின் ஆதரவை இழந்ததால் தான் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சி தோல்வியடைந்தது. இந் நிலையில் இஸ்லாமியர்களின் வாக்குகளை மனதில் வைத்து இந்த முடிவுக்கு அந்தக் கட்சி வந்துள்ளது. அதே போல சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் பாஜக வேட்பாளரை ஆதரிக்கத் தயாராக இல்லை.


இதுதாண்டா அரசியல் :-(