ஏற்கனவே நொந்து போய் இருக்கறவங்கள நானும் சேர்ந்து தொல்ல பண்ண வேணாம்கற நல்லெண்ணத்துல(??!!) நம்ம கடைய பூட்டி சாவிய எங்கிட்டோ போட்டு ரொம்ப நாள் ஆச்சுங்க.. மத்த கடைய அப்பப்ப பாத்து ஏதாவது சில்லறையா வாங்கறதோட சரி.. அதுவும் இப்ப ஒரு கடையில 30 க்கு மேல பப்ளிக்கா வாங்க கூடாதுன்னு வேற சொல்லிட்டதால, நல்லாதா நாலு பெரு அந்த 30அ வாங்கட்டும்னு விட்டுடறதும் உண்டு..
ஆனா பாருங்க பூட்டியிருந்த நம்ம கடைக்கும் நெத்து ஒருத்தர் விஸிட் கொடுத்தாரா... இன்னைக்கு செய்தியில கேட்ட ஒரு விஷயம் வேற எரிச்சல கிளப்பிடுச்சா.. சரி இத பத்தி நம்ம ஆளுங்க என்னா நினைக்கிறாங்கன்னு கேட்டுடலாம்னனு தோனுச்சு.. அதான் தேடுடா சாவிய... தொரடா கடையன்னு கைப்பிள்ள கணக்கா கிளம்பிட்டேன்.
சரி.. விஷயத்துக்கு வரேன்..இதான் அது.
Handicapped by the sports Ordinance biting into their advertising revenues, Nimbus today threatened to pull out of its Rs 2,714 crore five-year telecast deal with the Board of Cricket Council of India (BCCI)
தற்போதைய பிரச்சினை தூர்தர்ஷனின் உலகப்கோப்பை ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், இந்தியா தவிர மற்ற சில நாடுகளிலும் தெரியப்போவதுதான். இது nimbusக்கு கடுமையான வருமான இழப்பை கொடுக்கும்.
ஆரம்பத்தில் இருந்தே இதில் நமது தூர்தர்ஷன் செய்வது கொஜ்சம் கூட சரியில்லை என்பது என் கருத்து. இன்றைய காலங்களில் கிரிக்கெட் என்பது பார்வையாளரை பொறுத்தவரைதான் விளையாட்டு. ஆனால் அதனை ஒளிபரப்புபவர்களுக்கு அது ஒரு வியாபாரம். மிக கடுமையான போட்டியுள்ள ஒரு வியாபாரம். 50 ஓவர் விளையாடவேண்டிய ஒரு அணி 48 ஓவரில் ஆட்டமிழந்தாலே (அந்த 10 நிமிடத்தில் காட்டவேண்டிய விளம்பரங்களால்) அதனால் ஏற்படும் வருமான இழப்பை பற்றி கவலைப்படும் அளவுக்கு.
அப்படிப்பட்ட வியாபாரக்களத்தில் தூர்தர்ஷன் முதலீடு செய்யாமலேயே அடுத்தவனின் லாபத்தில் ஒரு கனிசமான பங்கை எடுத்துக்கொள்ள முயல்வதாகவே தோன்றுகிறது. மக்களின் நலன் கருதி என்ற பெயரில். இது சரியா? இதற்காக ஒரு சட்டமே இயற்றியுள்ளது எந்த விதத்தில் நியாயம்?
கடந்த காலங்களில் போட்டி நடக்கும் ஒரு வாரத்துக்கு முன் யாராவது பொதுநலமனு ஒன்றை போட்டு அதன் மூலம் நீதிமன்றமும் DDயுடன் ஒளிபரப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும்என்ற தீர்ப்பை வழங்கும். தனியார் தொலைகாட்சிகளுக்கு நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் DDயோ போட்டியைவிட அதிகமாக விளம்பரங்களை ஒளிபரப்பி நல்ல லாபம் பார்க்கும். (ஒரு ஓவரின் முதல் பந்தையும் கடைசி பந்தையும் பார்க்கவே முடியாது.)
இப்போது இந்தியா பங்கேற்கும் எல்லா போட்டியையும் யார் ஒளிபரப்பு உரிமை பெற்றிருந்தாலும் அவர்கள் DDக்கு தங்கள் ஒளிபரப்பை கொடுக்க வேண்டும் என ஒரு சட்டமே இயற்றிவிட்டார்கள். இதில் DDக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 3/4ஐ அந்த தனியார் தொலைக்காட்சியிடம் DD செலுத்தும். மீதி 1/4 DDக்கு. ஆனால் மொத்ததில் தனியார் தொலைக்காட்சிக்கு பெரும் இழப்பு இது.
வேண்டுமெனில் DDயே நேரடியாக ஒளிபரப்பு உரிமையை பெற வேண்டியதுதானே? அதை ஏன் அவர்கள் செய்வதில்லை? அதேபோல் தனியார் தொலைக்காட்சிகளும் ஏன் DDயை தனியாக விளம்பரங்கள் ஒளிபரப்ப ஒப்புக்கொள்கின்றன என்பதும் எனக்கு புரியவில்லை. தாங்கள் ஒளிபரப்புவதை அப்படியே DD ஒளிபரப்ப வேண்டும் விளம்பரங்களையும் சேர்த்து என கூறுவதுதானே? அதன் மூலம் இவர்கள் விளம்பரங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும். யார் எதில் பார்த்தாலும் ஒன்றுதான். வருமான இழப்பு ஏற்படாது என தோன்றுகிறது. இதனால் DDக்கு வருமான இழப்பு கொஞ்சம் ஏற்படலாம். ஆனால் மக்களுக்கு தொண்டு செய்வதற்காக அது அதனை ஒப்புக்கொள்ளும் என நம்புவோமாக :-)
எப்படி பார்த்தாலும் DD செய்வதும் புதிய சட்டமும் தர்மமாகாது என நினைக்கிறேன்.. உங்கள் கருத்து????
Wednesday, March 07, 2007
Saturday, October 07, 2006
மதம் தேவையா?
நண்பர் ஜோ அவர்களின் பதிவில் இந்த வரிகளை கண்டேன்..
//எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு மத நம்பிக்கை கிடையாது//
இது சரியான மற்றும் தேவையான அணுகுமுறை என்றே தோன்றுகிறது..அவரின் வரிகள் என்னை யொசிக்க வைத்தன.. அதன் விளைவே இந்த பதிவு.. என் மனதுக்கு தோன்றியவைகளை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.. இதுதான் சரி என்றோ, தவறு என்றோ நான் கூறவில்லை.. ஏனெனில் நான் சரி என்று நினைத்த பலவற்றை தவறு எனவும் தவறு என நினைத்த சிலவற்றை சரி எனவும் பின்னாளில் முடிவு செய்து இருக்கிறேன்.. இன்றைய என் நம்பிக்கை நாளை பொய்க்கலாம். இது அனைவருக்கும் பொருந்தும் என்பது என் எண்ணம். அதே போல், நான் என்றும் மதம் சார்ந்த பதிவுகளையோ அதன் சர்ச்சைகளிலோ சிக்க கூடாது என நினைத்தவன்.. இருந்தாலும் இந்த பதிவு நல்ல முறையில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் இதனை உங்கள் மனதுக்கு கொடுக்கிறேன்.
நானும் யோசித்து பார்க்கையில் இது போன்றே பல தருணங்களில் உணர்ந்து இருக்கிறேன்.. பல நேரங்களில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும், இருந்து இருக்கிறேன். கடவுள் இருக்கிறாரா அவர் நல்லவரா? என்றெல்லாம் பல முறை கேள்விகள் எழுந்ததுண்டு.(அதற்கு முக்கிய காரணம் பிறப்பினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வேற்றுமைகள். ஒரு முறை என் பெற்றோரின் திருமண நாளை ஒரு ஆதரவற்றோர் விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டாடினோம்.. அன்று நான் சந்தித்த குழந்தைகளின் நிலை என்னை சாட்டையால் அடித்தது போல் இருந்தது... நான் என்ன நன்மை செய்ததால் இன்று அவர்களை விட சற்று வசதியான இடத்தில் இருக்கிறேன்? என்ன தீமை செய்ததால் அவர்கள் மற்றவரிடம் உணவுக்கும் மற்ற அடிப்படை வசதிகளுக்கும் கையேந்தும் நிலையில் இருக்கிறார்கள்? எனக்கு கிடைத்த பதில் நான் பிறந்த இடமும் அவர்கள் பிறந்த இடமும் தவிர வேறு காரணம் இருப்பதாக தோன்றவில்லை. இது பற்றி மேலும் பேசினால் பதிவு வேறு திசைக்கு திரும்பும் என்பதால் இதனை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்)
அது போலவே, கடவுள் இருக்கிறாரா/நல்லவரா என்று எத்தனை கேள்விகள் எனக்குள் தோன்றுகிறதோ கிட்டதட்ட அதே அளவு கேள்விகள் கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதரவாகவும் தோன்றுகின்றன.
எதனையும் அறுதியிட்டு முடிவுக்கு வர முடியாததுதான் இதன் முடிவு. எந்த ஒரு மனிதனையும் மனிதனாக மதிக்க வேண்டும் என்பதே என்றும் என் நிலைப்பாடு..
மதம் ஒவ்வொருவருக்கும் அவரது (அவர்களால் கட்டுப்படுத்த முடியாத)பிறப்பினால் அடையாளமாகிறது.. உலகில் ஒரே ஒரு மதம்தான் உண்மை என்றால், மற்ற மதத்தில் மனிதர்கள் தோன்ற காரணமான அந்த கடவுளே குற்றவாளி.
இதனை பிடித்துக் கொண்டு கொஞ்சம் மேலே போனால், மற்ற மதங்கள் ஏன் தோன்றின? தோன்ற வேண்டிய அவசியம் என்ன? ஏன் கடவுள் அதனை கட்டுப்படுத்த வில்லை. ஏன் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பதில்லை?(ஒரு மனிதனை உறுவாக்குவது அவனுடைய சூழ்நிலைகளும் அவன் சந்திக்கும் மனிதர்களும்தான். அதனையும் அவன் கட்டுப்படுத்த முடிவதில்லை.)
இது போல இன்னும் பற்பல கேள்விகள் பிறக்கின்றன..
ஆனால் ஒன்று.. மதங்களின் (சரியான) பழக்கங்களை பின்பற்றுகையில் மனிதன் தவறுகள் செய்யாமல் தன்னை காத்துக்கொள்கிறான். எப்படி சட்டங்கள் ஒரு குடிமகனை தவறுகள் செய்தால் தண்டனை உண்டு என பயமுறுத்தி அவன் தீய வழியில் செல்லாமல் இருக்க பயன்படுகிறதோ அது போல. ஆகவே மனித குலத்திற்கு பாதை தெரிந்து நடக்க மதங்கள் தேவை. இந்த நிலையிலேயே மதங்களுக்கான மதிப்பு இருக்க வேண்டும்.
அடுத்தவர் மதத்தினை, நம்பிக்கைகளை மதிக்க கூடிய மனநிலை காலத்தின் கட்டயமாகிறது.. அதே நேரத்தில் அந்த நம்பிக்கைகள் மற்ற மனிதரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தவறாக இருப்பின் விவாதிக்ககூடிய, தவறு இருந்தால் மாற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும்.
சிறு வயதில் படித்த இந்த வரிகள் ஞாபகம் வருகிறது..
"மதம் என்பது குளிர் காலத்தில் எரியும் நெருப்பு போன்றது..தூர விலகினால் குளிரும்.. மிக மிக அருகில் நெருங்கினால் எரித்து விடும்."
//எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு மத நம்பிக்கை கிடையாது//
இது சரியான மற்றும் தேவையான அணுகுமுறை என்றே தோன்றுகிறது..அவரின் வரிகள் என்னை யொசிக்க வைத்தன.. அதன் விளைவே இந்த பதிவு.. என் மனதுக்கு தோன்றியவைகளை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.. இதுதான் சரி என்றோ, தவறு என்றோ நான் கூறவில்லை.. ஏனெனில் நான் சரி என்று நினைத்த பலவற்றை தவறு எனவும் தவறு என நினைத்த சிலவற்றை சரி எனவும் பின்னாளில் முடிவு செய்து இருக்கிறேன்.. இன்றைய என் நம்பிக்கை நாளை பொய்க்கலாம். இது அனைவருக்கும் பொருந்தும் என்பது என் எண்ணம். அதே போல், நான் என்றும் மதம் சார்ந்த பதிவுகளையோ அதன் சர்ச்சைகளிலோ சிக்க கூடாது என நினைத்தவன்.. இருந்தாலும் இந்த பதிவு நல்ல முறையில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் இதனை உங்கள் மனதுக்கு கொடுக்கிறேன்.
நானும் யோசித்து பார்க்கையில் இது போன்றே பல தருணங்களில் உணர்ந்து இருக்கிறேன்.. பல நேரங்களில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும், இருந்து இருக்கிறேன். கடவுள் இருக்கிறாரா அவர் நல்லவரா? என்றெல்லாம் பல முறை கேள்விகள் எழுந்ததுண்டு.(அதற்கு முக்கிய காரணம் பிறப்பினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வேற்றுமைகள். ஒரு முறை என் பெற்றோரின் திருமண நாளை ஒரு ஆதரவற்றோர் விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டாடினோம்.. அன்று நான் சந்தித்த குழந்தைகளின் நிலை என்னை சாட்டையால் அடித்தது போல் இருந்தது... நான் என்ன நன்மை செய்ததால் இன்று அவர்களை விட சற்று வசதியான இடத்தில் இருக்கிறேன்? என்ன தீமை செய்ததால் அவர்கள் மற்றவரிடம் உணவுக்கும் மற்ற அடிப்படை வசதிகளுக்கும் கையேந்தும் நிலையில் இருக்கிறார்கள்? எனக்கு கிடைத்த பதில் நான் பிறந்த இடமும் அவர்கள் பிறந்த இடமும் தவிர வேறு காரணம் இருப்பதாக தோன்றவில்லை. இது பற்றி மேலும் பேசினால் பதிவு வேறு திசைக்கு திரும்பும் என்பதால் இதனை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்)
அது போலவே, கடவுள் இருக்கிறாரா/நல்லவரா என்று எத்தனை கேள்விகள் எனக்குள் தோன்றுகிறதோ கிட்டதட்ட அதே அளவு கேள்விகள் கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதரவாகவும் தோன்றுகின்றன.
எதனையும் அறுதியிட்டு முடிவுக்கு வர முடியாததுதான் இதன் முடிவு. எந்த ஒரு மனிதனையும் மனிதனாக மதிக்க வேண்டும் என்பதே என்றும் என் நிலைப்பாடு..
மதம் ஒவ்வொருவருக்கும் அவரது (அவர்களால் கட்டுப்படுத்த முடியாத)பிறப்பினால் அடையாளமாகிறது.. உலகில் ஒரே ஒரு மதம்தான் உண்மை என்றால், மற்ற மதத்தில் மனிதர்கள் தோன்ற காரணமான அந்த கடவுளே குற்றவாளி.
இதனை பிடித்துக் கொண்டு கொஞ்சம் மேலே போனால், மற்ற மதங்கள் ஏன் தோன்றின? தோன்ற வேண்டிய அவசியம் என்ன? ஏன் கடவுள் அதனை கட்டுப்படுத்த வில்லை. ஏன் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பதில்லை?(ஒரு மனிதனை உறுவாக்குவது அவனுடைய சூழ்நிலைகளும் அவன் சந்திக்கும் மனிதர்களும்தான். அதனையும் அவன் கட்டுப்படுத்த முடிவதில்லை.)
இது போல இன்னும் பற்பல கேள்விகள் பிறக்கின்றன..
ஆனால் ஒன்று.. மதங்களின் (சரியான) பழக்கங்களை பின்பற்றுகையில் மனிதன் தவறுகள் செய்யாமல் தன்னை காத்துக்கொள்கிறான். எப்படி சட்டங்கள் ஒரு குடிமகனை தவறுகள் செய்தால் தண்டனை உண்டு என பயமுறுத்தி அவன் தீய வழியில் செல்லாமல் இருக்க பயன்படுகிறதோ அது போல. ஆகவே மனித குலத்திற்கு பாதை தெரிந்து நடக்க மதங்கள் தேவை. இந்த நிலையிலேயே மதங்களுக்கான மதிப்பு இருக்க வேண்டும்.
அடுத்தவர் மதத்தினை, நம்பிக்கைகளை மதிக்க கூடிய மனநிலை காலத்தின் கட்டயமாகிறது.. அதே நேரத்தில் அந்த நம்பிக்கைகள் மற்ற மனிதரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தவறாக இருப்பின் விவாதிக்ககூடிய, தவறு இருந்தால் மாற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும்.
சிறு வயதில் படித்த இந்த வரிகள் ஞாபகம் வருகிறது..
"மதம் என்பது குளிர் காலத்தில் எரியும் நெருப்பு போன்றது..தூர விலகினால் குளிரும்.. மிக மிக அருகில் நெருங்கினால் எரித்து விடும்."
Thursday, September 28, 2006
ஏமாத்திபுட்டீங்களே... திருமா தம்பி.
என்ன கொடுமை சார் இது?
கட்சிய உடைக்கறது, கடைசி நேரம் வரை வரை கூட்ட்ணியில இருக்க வச்சி அப்புரம் அணி மாற வைக்கறது, MLA க்களை அணி மாற வச்சி அறிக்கை விட வைக்கிறது,நடிகர்களை தன் பக்கம் இருப்பது போல் காட்டிக்கொள்வது..இது எல்லாத்தையும் வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்கறாங்களே..நியாயமா? அடுக்குமா?
அம்மா அந்த மாதிரி பன்னத ராஜதந்திரம் னு சொல்லிகிட்டு இருந்தோமே... அது எல்லாம் அம்மாவாலதான் முடியும்னு வேற வாய்சவடால் விட்டுகிட்டு இருந்தோமே.. கொடுத்த அல்வாவ முந்திரி, திராட்சையோட சேத்து இப்போ திருப்பி கொடுக்கறாங்களே.. இப்பொ எல்லாம் போச்சே...என்ன் பன்றதுன்னு புரியலியே...கண்ண வேற கட்டுதே..அய்யோ...அம்மா...
கட்சிய உடைக்கறது, கடைசி நேரம் வரை வரை கூட்ட்ணியில இருக்க வச்சி அப்புரம் அணி மாற வைக்கறது, MLA க்களை அணி மாற வச்சி அறிக்கை விட வைக்கிறது,நடிகர்களை தன் பக்கம் இருப்பது போல் காட்டிக்கொள்வது..இது எல்லாத்தையும் வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்கறாங்களே..நியாயமா? அடுக்குமா?
அம்மா அந்த மாதிரி பன்னத ராஜதந்திரம் னு சொல்லிகிட்டு இருந்தோமே... அது எல்லாம் அம்மாவாலதான் முடியும்னு வேற வாய்சவடால் விட்டுகிட்டு இருந்தோமே.. கொடுத்த அல்வாவ முந்திரி, திராட்சையோட சேத்து இப்போ திருப்பி கொடுக்கறாங்களே.. இப்பொ எல்லாம் போச்சே...என்ன் பன்றதுன்னு புரியலியே...கண்ண வேற கட்டுதே..அய்யோ...அம்மா...
Subscribe to:
Posts (Atom)