Monday, August 04, 2008

குசேலன் - நேர்மையான விமர்சனம்

குசெலன் படத்தை ரிலீஸுக்கு முந்திய நாளே பார்த்து விட்டாலும் அடுத்த இரண்டு நாட்கள் இனையப்பக்கம் ஒதுங்க முடியவில்லை. நேற்று வந்து பார்த்ததில் படத்தை விமர்சனம் செய்த அனைவரும் கிட்டதட்ட கடித்து குதறி இருந்தனர். அதில் எனக்கு ரஜினி மீதான காழ்ப்புணர்ச்சியே அதிகம் தெரிவதால் இந்த பதிவு.


படத்தில் பாராட்டுவதற்கும் குட்டுவதற்கும் தேவையான அளவு வசதி உள்ளது.



1. சண்டை காட்சி இல்லாமல் பன்ச் வசனங்கள் இல்லாமல் இது போன்ற கதையில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டது பாராட்டப்பட வேண்டியது. இது நாள்வரை மசாலா பாடங்களையே கொடுக்கிறார் என குற்றம் சாட்டியவர்கள் எங்கே போனார்கள் என தெரியவில்லை. இதை பற்றி ஒரு சிறு பாராட்டை ஒரு பதிவில்கூட பார்த்ததாக நினைவில்லை.


2. பசுபதியின் கதாபாத்திரம் அருமை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் வறுமையில் செம்மை. ஒரு சிலர் பசுபதியின் மீது பரிதாபம் வரவில்லை என கூறி இருந்தனர். எனக்கு அவர்கள் மேல் பரிதாபமே வருகிறது. நேர்மையாகவும் அதில் நிம்மதியாகவும் வாழும் பாத்திரம் அது.நன்றாக செய்திருக்கிறார்.ஆனால் கிட்டதட்ட ஒரே விதமான நடிப்பை மட்டுமே வெளிக்காட்ட கூடிய கதை.

3. சொல்லம்மா பாடல் காட்சியில் வரும் பிண்ணனி காட்சிகள் அருமை(டால்பின்களை தவிர்த்து).

4. இது கடைசிகாட்சி வரை பசுபதி படமே. கடைசி காட்சியில் ரஜினி படமாக மாறி விடுவது ரஜினியின் அருமையான நடிப்பால். மனிதர் கலக்கி இருக்கிறார்.


5.படத்தில் இறுதி காட்சி அருமை. படம் ஆரம்பம் முதல் அனைத்து காட்சிகளும் இதனை நோக்கியே போகின்றது. படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்ததாலும் இறுதி காட்சியை எதிர்ப்பார்ப்பதாலும் முன்பாதி ஒருவேளை சலிப்பை பலருக்கு கொடுத்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆனாலும் இந்தளவுக்கு அதிகமாக ஓவர்பிலப் கொடுத்து இருந்தும் இறுத்க்காட்சி அனைவருக்கும் நிறைவை கொடுத்தது ரஜினியால்.

6.நயன்தாரா கவர்ச்சிக்காக மட்டுமே வருகிறார்.:-( அந்த பாடல் காட்சியும் தேவையில்லாதது.

7. காமெடி எனற பெயரில் வரும் காட்சிகள் கொடுமை. ரஜினியை சந்திக்கும் காட்சியை தவிர மற்ற காட்சிகளில் எல்லாம் வடிவேலு சொத்ப்போ சொதப்பல். சந்திரமுகி அளவு இல்லையென்றாலும் இரட்டை அர்த்த வசனங்கள் கடுப்பெற்றுகின்றன. இதெல்லாம் தேவையா?? வாசூஊஊஊ...


9. வாசு செய்த பில்டப் ஓவர்.. அவர் ஓவராக பில்டப் கொடுத்ததே பல பிரச்சினைகளுக்கு காரணம். ரஜினியும் ஆரம்பத்தில் தெளிவாகவே இருந்தார்.. ஆனால் வள்ளி போல் ஆகிவிடும் என பயமுறுத்தி இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார் வாசு.

மொத்தத்தில் அதிக எதிர்பார்ப்பில்லாமல் பார்த்தால் நிச்சயம் ரசிக்கக்கூடிய படம். ரஜினி ரசிகர்களுக்கு படம் பிடிக்கும். பொதுவானவர்களுக்கு இறுதிக்காட்சி பிடிக்கும். ரஜினியை பிடிக்கதவர்களுக்கு? கண்டிப்பாக பிடிக்காது. தியேட்டர் பக்கம் ஒதுங்கவேண்டாம்.. இல்லை பார்த்து பின் திட்டியே தீருவேன் என்றால் நான் என்ன சொல்ல.

ரஜினி இன்னும் மசாலாக்களை குறைத்து நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடிக்க இந்த படம் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெரும். சிவாஜிக்கும் தசாவதாரத்துக்கும் இது போன்றே நெகட்டிவ் விமர்சனங்கள் ஆரம்பத்தில் வந்தன. பிறகு அதன் வெற்றி பலருக்கு கண்ணை கட்டியது.. அந்தளவிற்கு இல்லாவிட்டாலும் நிச்சயம் வெற்றியடையும் எனவே நான் நம்புகிறேன்

படத்தில் பனிபுரிந்தவர்களுக்காக நிதியுதவி அளிக்கும் ரஜினிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Sunday, August 03, 2008

ரஜினியின் மன்னிப்பு - என் பார்வையில்.

"நான் தவறு செய்துவிட்டேன்.. கர்நாடக மக்கள் எனக்கு பாடம் கற்றுக்கொடுத்து விட்டனர். இனி இது போன்ற தவறை என் வாழ்நாளில் செய்யமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். குசெலன் வெளிவர ஒத்துழைப்பு தாருங்கள்" - குசேலன் படத்தை நண்பர்களுடன் பார்க்க ஆரவாரமாக ஆயத்தமாகிக்கொண்டிருந்த நேரத்தில் இந்த கசப்பான செய்தியை கேட்டேன்..

புரியவில்லை.. புரியவில்லை என்பதை விட நம்பமுடியவில்லை..ஆனால் உண்மை என ஒரு நண்பர் உறுதிப்படுத்தினார். ரஜினி ரசிகனானாலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பிடிக்காத ரசிகன் நான். அதற்கு காரணம் அவரால் ஒன்றும் செய்துவிட முடியாது + அரசியல் அவருக்கு ஒத்துவராது என நினைத்ததே.. ஆனால் நல்லது செய்ய முயற்சிப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது கிடையாது.. இந்த செய்தியை கேட்கும் வரை.

எனக்கு பயங்கர கோபமும் எரிச்சலும் வந்தது. அவர் ஒகனேக்கல் விவகாரத்தில் பேசியது, பிறகு மன்னிப்பு கேட்க முடியாது என சொன்னது, KFCCக்கு கடிதம் எழுதியது வரை அனைத்தும் சரியே.. அவர் திறமை மேல் உள்ள மதிப்பு அதிகமானது. அவரை இன்னும் பிடித்தது..
ஆனால் இந்த மன்னிப்பு???? சீ என சொல்ல வைத்துவிட்டது.

அவசியமா?
அந்த மன்னிப்பின் அவசியம் எனக்கு இன்னும் புரியவில்லை. குசெலன் இங்கு வெளியிடப்படுவதில் எந்த பெரிய சிக்கலும் இருக்கவில்லை. திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி விட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. மேலும் ரஜினி மன்னிப்பு கேட்டு அப்படி படம் பார்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே கர்நாடகாவில் உள்ள எந்த ரஜினி ரசிகனிடம் கேட்டிருந்தாலும் வரும் பதிலாக இருந்திருக்கும். ஒருவேளை குசெலன் வெளியிடப்படாமல் இருந்திருந்தால் அது கன்னடர் மத்தியிலும் வட்டாளுக்கு கெட்ட பேரையே வாங்கி தந்து இருக்கும். இதனால் சிறு நட்டம் ஏற்பட்டாலும் வேறு விதத்தில் அதனை சரிப்படுத்த முயன்றிருக்கலாம்.

சரியா?
தனிப்பட்ட முறையில் தனது வீரம் இவ்வளவுதான் என்பதை புரிய வைத்து விட்டார். தன்னை/தான் பேசுவதை நம்புபவன் முட்டாள் என சொல்லாமல் சொல்லிவிட்டார். இந்த மன்னிப்பு மூலம் தமிழக உரிமை தவறோ என்ற ஐயப்பாட்டை பல கன்னடர்கள் மனதில் ஏற்படுத்தி விட்டார்.இதன் மூலம் ஒன்றுமில்லாத (டெபாசிட் இழந்த)வட்டாளை பெரிய ஆள் என்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்திவிட்டார்.. அந்தாள் மேலும் ஒவ்வொரு முறையும் எதை வேண்டுமானாலும் செய்யலாம்..தன்னை மீறி ஒன்றும் செய்ய இயலாது என செயல்பட வாய்ப்புகள் அதிகம். இது ஒகனேக்கல் மற்றும் எந்த தமிழக நலன் சார்ந்த திட்டமாக இருந்தாலும் தமிழர் நலனுக்கு எதிராக இது இருக்கும் என சொல்லவேண்டியதில்லை. ஆகவே இந்த மன்னிப்பு நிச்சயம் மிகப்பெரிய தவறுதான்.

மேலும் ரஜினி ரசிகர் ஒவ்வொருவருக்கும் இது கசப்பையே கொடுத்திருக்கும் என்பது என் எண்ணம்.. ரஜினியை மதிக்கும் போற்றும் ரசிகர்களிம் தன்மானத்தை நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது ரஜினியின் கடமை. அதனை அவர் செய்ய தவறும்போது அவரின் மானத்தையும் மதிப்பையும் தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் எந்த ரசிகனுக்கும் கண்டிப்பாக தேவையில்லை.

ம்ம்.. சொல்ல மறந்து விட்டேன்
அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Wednesday, June 18, 2008

பாமாக- திமுக-ஆதிமுக-காங்கிரஸ்

ராமதாஸ் : பார்த்தீங்களா..பார்த்தீங்களா.
ஜெயா : கேட்டீங்களா..கேட்டீங்களா
மு.க : (2-3 மாதம் கழித்து) : வாங்கிட்டீங்களா..வாங்கிட்டீங்களா
_____________________________

திமுக - பாமாக முறிவு நீண்ட நாட்களாக எதிர்பார்த்ததுதான். வெளியேறுவார்களா/வெளியேற்றப்படுவார்களா என்பதற்கு மட்டும் முடிவு தெரிந்துவிட்டது.

பாமாகவுக்கு ஆதிமுக(கூடவே பாஜாக)வுடன் கூட்டு சேர ஆசைப்பட்ட எதிர்பார்த்த சந்தர்ப்பம். மத்தியில் பாஜாக தான் அடுத்து வரும் போல் தெரிகிறது.பாமாக ஜெயிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள ஆசசப்படும் என்பது தெரிந்ததுதான்.

இது திமுகாவுக்கு நிச்சயம் பலவீணம்தான். அவர்களின் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. (கனிமொழி/ஸ்டாலின் - அழகிரி /அழகிரி மகள்/ராயல் கேபிள் விஷன்) - குடும்ப அரசியல் விவாதம் மறுபடியும் ஆரம்பிக்கும். இதற்கு திமுகாவிடம் சரியான பதில்கள் இருப்பதாக தெரியவில்லை.

இப்போது காங்கிரஸுக்கு செல்வாக்கு அதிகம். அது அவர்களின் பல கோஷ்டிகளை எப்படி யோசிக்கவைக்கும்/பேசவைக்கும் என்பது கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும். மொத்தத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

ஆதிமுக, அதாவது ஜெயலலிதா அமைதியாக ஆணவம் இல்லாமல் இருந்தாலே அடுத்த ஆட்சியை பிடித்து விடலாம். இருப்பாரா?

மதிமுக : ?